Friday, January 15, 2010

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!!

கதிரறுத்துத் தலயில் வச்சிக்
களத்துமேட்டில் அடிச்சுப்போட்டு
முதிர்ந்தநெல்லை மூட்டைகட்டு முத்தம்மா-நமக்கு
முடிஞ்சுபோச்சு கஸ்டமெல்லாம் முத்தம்மா

சாணமிட்டுத் தரைமெழுகி
சந்தோசமாக் கோலமிட்டு
சாமங்கிப்பூ தூவிடலாம் முத்தம்மா-கும்பிட்ட
சாமியெல்லாம் கைகொடுக்கும் முத்தம்மா

வெளஞ்சநெல்ல அடிச்சுக்குத்தி
வெள்ளித்துண்டா அரிசியெடுத்து
களஞ்சுபோட்டுப் பொங்கலிடு முத்தம்மா-இனிக்கும்
கரும்பெடுத்துப் பானையில் கட்டு முத்தம்மா

பாற்கடலாப் பொங்கிவரும்
பச்சரிசிப் பொங்கலைத்தான்
படச்சிடுவோம் சாமிக்குத்தான் முத்தம்மா-எங்குமே
பஞ்சமில்லாதிருக்கணுமே முத்தம்மா

தைபொறந்தா வழிபொறக்கும்
தரணியெல்லாம் மனம்செழிக்கும்
தமிழரெல்லாம் தலைநிமிர்வார் முத்தம்மா-தமிழைத்
தாயைப்போலக் கும்பிடுவோம் முத்தம்மா

1 comment:

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாயிருக்கு கும்மிபாட்டு...!