Friday, January 15, 2010

பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்

இது என் இணையநண்பர் மும்பைவாசி எழுதின பாடல்:

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்
காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை
மூடிவைச்சா உயிரும் வாழுமா…

கண்களாலே பேசிக்கிறோம் நாலு மாசமா
அதை சொல்லாமலே மூடிவைச்சா காதலாகுமா
நாள்முழுதும் காத்திருக்கும் என்னைப்பாருமா
நீயும் கண்டுக்காம போனா இந்த ஜீவன்வாழுமா

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்
காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை
மூடிவைச்சா உயிரும் வாழுமா…

பொய்யும் புரட்டும் சொல்லிப் பலரும் காதலிப்பாங்க
நீயோ, நடந்துபோக பின்னால் வந்து பேசிப்பார்ப்பாங்க
காதல்கடிதம் திரும்பதிரும்ப கொடுத்துநிப்பாங்க
நீயும் திருமணத்தின் பேச்செடுத்தா ஓடிப்போவாங்க

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்
காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை
மூடிவைச்சா உயிரும் வாழுமா…

காதலதை எனக்குத் தர தயங்கலாகுமா
அடி காதலியே உன் மனதில் இன்னும் குழப்பமா
மனமிரண்டும் ஒத்தபின்னும் மௌனமாகுமா
மனதின்காதல் சொல்லியென்னைநீயும் வாழவையம்மா…

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்
காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை
மூடிவைச்சா உயிரும் வாழுமா…



இதுக்குப் போட்டியா நான் எழுதின பாடல் இதோ:

நாஷ்டா எறங்கலே நாலுநாளா ஒறங்கலே
வேஷ்டா கூவாங்கரையிலே குந்திநிக்குறேன்
கொருக்குப்பேட்டை கோமளாவே வா-கெல்லீஜ் போவலாம்
கொருக்குப்பேட்டை கோமளாவே வா

நானாங்காட்டி நாயாட்டந்தான் பின்னால் சுத்துறேன்-உன்
நைனாவந்து ஒதக்கச்சொல்ல பேயாக்கத்துறேன்
தேனாம்பேட்டே சிக்னலாட்டம் மனசு கொமயுதே-நீ
தேவித்தேட்டராண்ட வந்தா மனசு நிறயுதே (நாஷ்டா எறங்கலே)

ஆவ்டியிலே பாத்தபோது சிரிச்ச பொண்ணுதான்-இப்போ
அண்ணாநகரு வந்தாங்காட்டி மொறச்சகண்ணுதான்
வேளச்சேரி ரயிலப்போல மனசு காலிதான்-உனக்கு
வேணுமுன்னா மாயாஜாலு போயி ஜாலிதான்

நாஷ்டா எறங்கலே நாலுநாளா ஒறங்கலே
வேஷ்டா கூவாங்கரையிலே குந்திநிக்குறேன்
கொருக்குப்பேட்டை கோமளாவே வா-கெல்லீஜ் போவலாம்
கொருக்குப்பேட்டை கோமளாவே வா

No comments: