Saturday, January 16, 2010

அப்பா, நீ எப்போ வருவே?

புலம்பெயர்ந்த தந்தைக்காக ஒரு குழந்தை புலம்பினால்....

கரடிபொம்மையைக் கட்டிக்கிட்டு தூங்குவேன் அப்பா-என்
கனவில் வந்து ஒரே ஒரு கதை சொல்லேன் அப்பா
கடல்பலவும் கடந்துதான் இருக்குறே அப்பா-வீட்டுக்
கண்ணாடிக்கூட்டில் புகைப்படமா சிரிக்குறே அப்பா

வண்டியிலே பள்ளிக்கூடம் அழைச்சுப்போவியே-உன்
வாசனைநான் மோப்பம்புடிச்சு வருஷமாச்சுதே
பச்சைக்குதிரை ஓடலை பார்க்குப்பக்கம் போகலே
பாடப்புத்தகம் அட்டைபோட நீயில்லே அப்பா!

அம்மா சிரிச்சு நானும் பார்க்க ஆசை வருகுதே-தெனம்
ஆத்திரமாப் பேசுறாங்க அளுகை வருகுதே
காசுபணம் அனுப்புறே! கணினியிலே பேசுறே!
கரடிபொம்மை தவிர எனக்கு யாருமில்லையே

No comments: