Saturday, January 16, 2010

காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ

காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-எழுத்துலே
காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-அதனால்
கவனமாக எழுத்தில் காலைப்போட்டுக்கோ! போட்டுக்கோ!

பாலுக்கொரு காலிருக்கு பல்லுக்கில்லே காலு-நீ
பாலைப் பல்லா எளுதிப்புட்டா கொறயும் மார்க்கு நாலு
காலுக்குமே காலிருக்கு கல்லுக்குக் கிடையாது-நீ
காலின் காலை வெட்டிடாதே தமிழில் எழுதும்போது

காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-எழுத்துலே
காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-அதனால்
கவனமாக எழுத்தில் காலைப்போட்டுக்கோ! போட்டுக்கோ!

சோத்துக்கொரு காலிருக்கும் சேத்திலது இல்லை-மழை
சோண்ணுகொட்டும்போதுவரும் காலுக்குத்தான் தொல்லை
காளைக்குண்டு நாலுகாலு களைக்கு உண்டா கண்ணு-நீ
கருத்தாக எழுதையிலே காளைக்குக் கால் ஒண்ணு

காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-எழுத்துலே
காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-அதனால்
கவனமாக எழுத்தில் காலைப்போட்டுக்கோ! போட்டுக்கோ!

காதுலேதான் போட்டுக்கோ காலப்போடத் தெரிஞ்சுக்கோ
காலுக்கு மேல் காலு போட்டா கர்வமுண்ணு புரிஞ்சுக்கோ
கடைக்குப்போயி காலுபாட்டில் நாமவாங்கிக் குடிக்குறோம்
காரசாரமாகக் கோழிக்கால வாங்கிக் கடிக்குறோம்

காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-எழுத்துலே
காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-அதனால்
கவனமாக எழுத்தில் காலைப்போட்டுக்கோ! போட்டுக்கோ!

No comments: