Thursday, January 21, 2010

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

மஞ்சக்கறுப்புச் சாயம்பூசி மனசுபோல மனுசங்களை
பஞ்சுமூட்டை போல்திணிக்கும் ஷேர் ஆட்டோவே-போட்டுப்
பழரசம்போல் பிழியுறியே ஷேர் ஆட்டோவே

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

அஞ்சுபத்துக்கு எங்களப்போல அலயுறியே நாள்முழுக்க
பிஞ்சுபோன சீட்டுமேலே ஷேர் ஆட்டோவே-எங்களப்
பிதுங்கி இருக்கச் சொல்லுறியே ஷேர் ஆட்டோவே

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

பேருந்துநிறுத்தம் அருகில்வந்து பெரிய ஆரனை அடிச்சுக்கிட்டு
பெருச்சாளிபோல நிக்கும் ஷேர் ஆட்டோவே-வித்தாப்
பேரீச்சம்பழம் தேறிடுமா ஷேர் ஆட்டோவே!

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

அம்பத்தூர் ஓட்டியில் ஏறுனவங்க அண்ணாசாலையில் இறங்கையிலே
ரொம்பத்தான் மெலிஞ்சு போனதுபோல் ஷேர் ஆட்டோவே-பொலம்பி
ரோதனையாச் சொல்லுறாங்க ஷேர் ஆட்டோவே

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

மோசமான ரோட்டுமேலே மொதமொதலா ஏறிவந்த
மாசமான கர்ப்பிணிக்கும் ஷேர் ஆட்டோவே-வண்டியில்
மகப்பேறு நடத்திப்புடுறே ஷேர் ஆட்டோவே

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

வெடலப்பையன் பக்கத்துலேதான் வெவரமில்லாப் பொண்ணயிருத்திக்
கடலபோட வைக்குறியே ஷேர் ஆட்டோவே-உன்னால்
காதலிப்போ கூடிப்போச்சுது ஷேர் ஆட்டோவே

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

No comments: