Sunday, December 8, 2013

போனால் போகட்டும் போடா




போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா-இந்த
பூமியில் சிலையால் பூசல்கள் ஏனடா
போனால் போகட்டும் போடா

வைப்பது சிலைகள் நோவது தலைகள்
லாபம் எவர்க்கும் கிடையாது
வைகிற பேரின் வாய்க்கு அவல்-இந்த
வாதம் எதற்கோ புரியாது
ஊரில் ஆயிரம் கோளாறு-அதை
உடனே தீர்க்கும் ஆள்யாரு?-வெறும்
உருவச்சிலைக்கா தகராறு?

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா-இந்த
பூமியில் சிலையால் பூசல்கள் ஏனடா
போனால் போகட்டும் போடா

இறந்தும் நெஞ்சினில் வாழ்கின்றான்-சிலை
இல்லையென்றே அவன் அழுதானா?
இருக்கும் சிலைகள் படுகிறபாட்டை
க்கும் கேட்டே தொழுதானா?
காக்கைகளாலே நாள்தோறும்-சிலை
கழிவினில் ஊறி தினம்நாறும்-மழை
கடும்வெயில் தாங்கி நிறம்மாறும்

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா-இந்த
பூமியில் சிலையால் பூசல்கள் ஏனடா
போனால் போகட்டும் போடா

நடிகர்கள் வருவார் நடிகர்கள் போவார்
இவன்போல் ஒருவன் வருவானா?
நரம்பும் சதையும் உள்ளமும் இணைத்தே
திலகம் எனும்பேர் பெறுவானா?
இதற்கும் மேலே சிலையெதற்கு?-இங்கு
இன்றும் அவனின் கலையிருக்கு-எங்கள்
சிங்கத்தை நாளும் நினைப்பதற்கு

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா-இந்த
பூமியில் சிலையால் பூசல்கள் ஏனடா
போனால் போகட்டும் போடா