Monday, January 18, 2010

தீ....நகர்!

ஊருக்குள்ளே சனமெல்லாம் வூட்ட இளுத்துப் பூட்டிக்கினு
உசுமாரோட்டுக்கு வந்திருச்சா பையைத் தோள்லே மாட்டிக்கினு
அல்லாக்கடயும் பார்க்கசொல்ல கூட்டம் தலையைப் பிய்க்குதே!
எல்.கே.எஸ்சிலும் ஜி.ஆர்.டியிலும் சனங்க நகைக்கு மொய்க்குதே!

கிஜ்ணா சூட்டுக்கடயிலே மாசூர் பாகு வாங்குது
கிஜுணவேணித் தேட்டராண்ட மல்லிகைப்பூ வாங்குது
நல்லிஜில்கிலே பொண்ணுங்கோ பொடவைரவுக்க வாங்குது
நாய்டுஹாலில் ஒண்டியிலே இன்னாத்தையோ வாங்குது

சென்னஜிலுக்கு சரவணா போத்தீஜிலும் கூட்டம்தான்
செருப்புப்போட கோவிலாண்ட சேர்ந்துநிக்குது கூட்டம்தான்
கரும்புசூஸ் பழரசத்துக்கு டோக்கன்வாங்கக்கூட்டம்தான்
காயிவாங்க மார்க்கெட்டுலே காலைமரிக்கும் கூட்டம்தான்

காலேஜுக்குக் கட்டடிச்சு சைட்டடிக்கும் ஆளுமுண்டு
கவனம் கொஞ்சம் பெசகினா ஜேப்படிக்கிற ஆளுமுண்டு
கடைக்கு வெளியே மனைவிக்காகக் காத்திருக்கும் ஆளுமுண்டு
காசில்லாம சும்மானாச்சும் நோட்டம் வுடுற ஆளுமுண்டு

பணமில்லேன்னு பொலம்புறான் பாதிப்பேரு வெளியிலே
பாண்டிபஜாரு ரோட்டாண்டதான் நடக்கக்கூட முடியலே
தேஞ்சுதேஞ்சு சேர்த்த பணத்தைத் டிநகருலே தொலைக்குறோம்
தெருவில்பிச்சை கேட்குறவனை எமனப்போல முறைக்குறோம்

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்லாயிருக்குங்க உங்க பதிவு...

settaikkaran said...

//நல்லாயிருக்குங்க உங்க பதிவு...//

சங்க்கவி அண்ணே!

வருகைக்கு ரொம்ப நன்றி