Wednesday, February 10, 2010

அடையாளம்




குப்பைத்தரைமீது குத்திட்டிருந்தபடி
கூவித்தினசரியும் பூவிற்கும் பெண்ணவளே

அழுந்தத்தலைசீவி அழகாய்ப்பொட்டுமிட்டு
அடர்ந்தகூந்தலிலே அணிந்திடுவாள் மலர்ச்சரத்தை

மாலைப்பொழுதினிலே பணிமுடிந்துதிரும்புகிற
மாதர் அவளிடத்தில் பூவாங்கிச் சூடிடுவர்

கூடைமலர் விற்றபின்னே நடைமேடைதனிலிருக்கும்
குழாயில் முகம்கழுவி குங்குமத்தை அழித்திடுவாள்

தலையிலணிந்தபூவைத் தரைமேல்வீசிவிட்டு
தளர்ந்தநடையுடனே தன்வழியே சென்றிடுவாள்

காலிக்கூடைதனைக் கைம்பெண்சுமந்துசெல்வாள்
கனத்தமனத்துடனே கண்ணீர்மல்கிடுவாள்

4 comments:

அண்ணாமலையான் said...

இந்த சமுதாயத்த செருப்பால அடிச்சா கூட திருந்தாது.. அதனாலதான் இப்டி வைக்கரத்தும், அழிக்கறதும்

Ananya Mahadevan said...

அருமையான நெஞ்சைத்தொடும் கவிதை.

settaikkaran said...

//இந்த சமுதாயத்த செருப்பால அடிச்சா கூட திருந்தாது.. அதனாலதான் இப்டி வைக்கரத்தும், அழிக்கறதும்//

உண்மைதானுங்க! தாம்பரம் ஸ்டேஷனிலே நான் கண்ணாலே பார்த்தேன் இந்தக்கொடுமையை! நன்றிண்ணே!

settaikkaran said...

//அருமையான நெஞ்சைத்தொடும் கவிதை.//

ரொம்ப நன்றிக்கா