Thursday, February 11, 2010

காதலர் தின சிறப்புக் கவிதை.01


ஞாபகம் இருக்கிறதடி!

முதன்முதலாய் உன்
முகத்தைக் கண்ட நாள்!

கூட்டத்தில் நிரம்பிய
கூட்டுவண்டியிலே
கூடுவாஞ்சேரிதனில்
குதித்து ஏறினாய்!

பயணிகளின் பேச்சு
பார்த்ததும் போச்சு!
பார்வைக்கணைகளெல்லாம்
பாய்ந்தன உன்மேலே!

அருகினில் வந்தாய்!
அதிர்ந்து போனேன்!
குரல்தனைக் கேட்டேன்

"ஐயா சாமி தர்மம் பண்ணுங்கய்யா!"

எச்சரிக்கை: இது ஆரம்பம் தான்! இன்னும் வரும்; வரணும்.

16 comments:

அகல்விளக்கு said...

//எச்சரிக்கை: இது ஆரம்பம் தான்! இன்னும் வரும்; வரணும்.//

அருமை. ஆழமான கருத்து. கண்ணீர் விட வைக்கிறது. ஸ்ரேயா அழகாயிருக்காங்க. சிரித்து ரசித்தேன். வாழ்க ஸ்ரேயா. ஒன்னும் புரியல. சேட்டை அருமை. என்ன சொல்ல வர்றீங்க. ஹாஹாஹா. :-) கவிதை அருமை. இப்படியெல்லாம் சீரியசா பதிவு எழுத கூடாது. ரொம்ப சிரிப்பு வருது. வாழ்த்துக்கள். தொடருங்கள். ரசித்தேன். சூப்பரு. ரொம்ம்ம்ப நல்லாருக்கு...

(இப்படியெல்லாம் ஒன்னும் புரியாம ஒரு பின்னூட்டம் வரும். வரலின்னா ஏண்டா வரலன்னு ஈரோடு வரைக்கும் வந்து கேளுங்க..)

சைவகொத்துப்பரோட்டா said...

ஆத்தாடி, இன்னும் வரட்டும், நாங்க அசர மாட்டோமில்ல:)) நிசமாவே நல்லா இருக்கு.

settaikkaran said...

(இப்படியெல்லாம் ஒன்னும் புரியாம ஒரு பின்னூட்டம் வரும். வரலின்னா ஏண்டா வரலன்னு ஈரோடு வரைக்கும் வந்து கேளுங்க..)

அகல்விளக்கு அண்ணே! ஈரோடுங்களா, அதான் பள்ளிப்பாளையம் சிக்கன் மாதிரி அட்டகாசமா எழுதறீங்க!

settaikkaran said...

//ஆத்தாடி, இன்னும் வரட்டும், நாங்க அசர மாட்டோமில்ல:)) நிசமாவே நல்லா இருக்கு.//

நாங்களும் அசராம எழுதுவோமில்லா? நன்றி அண்ணே!!

துபாய் ராஜா said...

இதை விட யாரும் சிறப்பா காதலர்தினக்கவிதை எழுதிட முடியாது. சேட்டை...சேட்டை..சேட்டை. சேட்டைக்காரா.. :))

Unknown said...

சா சூப்பர் பஸ் (பாஸ்)

Ananya Mahadevan said...

உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி இருக்கா இல்லையா ஸ்ரேயா, அதான் அவளையே நினைச்சு நினைச்சு உனக்குள்ள இந்த மாதிரி கவுஜ எல்லாம் ஊற்றெடுக்குது. பாவம்!

அகல்விளக்கு said...

//அநன்யா மஹாதேவன் said...

உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி இருக்கா இல்லையா ஸ்ரேயா, அதான் அவளையே நினைச்சு நினைச்சு உனக்குள்ள இந்த மாதிரி கவுஜ எல்லாம் ஊற்றெடுக்குது. பாவம்!
//

சூப்பருங்க அக்கா...

நல்லா சொல்லுங்க....

B-)

settaikkaran said...

//இதை விட யாரும் சிறப்பா காதலர்தினக்கவிதை எழுதிட முடியாது. சேட்டை...சேட்டை..சேட்டை. சேட்டைக்காரா.. :))//

வருக வருக துபாய்ராஜா அண்ணே! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! அடிக்கடி வாங்கண்ணே!!

settaikkaran said...

// சா சூப்பர் பஸ் (பாஸ்) //

மிக்க நன்றி சங்கர் அண்ணே! அடிக்கடி வாங்க!!

settaikkaran said...

//உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி இருக்கா இல்லையா ஸ்ரேயா, அதான் அவளையே நினைச்சு நினைச்சு உனக்குள்ள இந்த மாதிரி கவுஜ எல்லாம் ஊற்றெடுக்குது. பாவம்!//

அக்கா, என்னை என்ன வேண்ணாலும் திட்டுங்க! சின்னப் பொண்ணை ஒண்ணும் சொல்லாதீங்க!அப்புறம் வெங்காய வெலை ஏறிடும் ஆமா!

settaikkaran said...

//சூப்பருங்க அக்கா...

நல்லா சொல்லுங்க....

B-)//

You Too அகல்விளக்கு அண்ணே? :-(((((((((

அன்புடன் நான் said...

ஏஏஏஏன்ன்ன்ன்ன்
இம்புட்டு மிரட்டல்!

அண்ணாமலையான் said...

எங்க ஸ்ரெயா? எங்க ஸ்ரெயா? எங்க ஸ்ரெயா? அய்யோ கானொமே..?!!

settaikkaran said...

//ஏஏஏஏன்ன்ன்ன்ன் இம்புட்டு மிரட்டல்!//

ஹி..ஹி! சும்மா டமாசுண்ணே! :-))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே!

settaikkaran said...

//எங்க ஸ்ரெயா? எங்க ஸ்ரெயா? எங்க ஸ்ரெயா? அய்யோ கானொமே..?!!//

அண்ணாமலையான் அண்ணே! ஸ்ரேயா செம்புலப்புயநீர் மாதிரி கலந்திட்டாங்க என்னோட.!:-))