Tuesday, February 15, 2011

சோனா, இது நிஜம் தானா?

"என்னய்யா அக்கிரமமாயிருக்கு! எவனோ ஒருத்தன் தற்கொலை பண்ணிக்கப்போறேண்ணு மெரட்டிக்கிட்டிருக்கான். எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறீங்களே?" என்று எரிந்து விழுந்தபடி கூட்டத்தை விலக்கியபடி முன்னேறினேன்.

"யோவ்! அவன் கையிலே தீப்பெட்டி வச்சிருக்கிறான். சட்டை பேண்டேல்லாம் மண்ணெண்ணையிலே தொப்பலா நனைஞ்சிருக்கு. பக்கத்துலே போயிராதே! நீ வேறே அசப்புலே தீக்குச்சி மாதிரியே இருக்கே!"

கொஞ்சம் பீதியாகவே இருந்தாலும், அடக்கிக்கொண்டு அவனை நோக்கி அடிமேலடி எடுத்து வைத்தேன்.

"பக்கத்துலே வர்றாதே! நான் தற்கொலை பண்ணிக்கப்போறேன்!"

"வரலை ராசா வரலே! அட எடுபட்ட பயலே, இப்படி கிருஷ்ணவேணி தியேட்டருக்கு முன்னாலே கிருஷ்ணாயிலை உடம்பெல்லாம் ஊத்திக்கிட்டு கையிலே தீக்குச்சியோட நிக்குறியே! எதுக்காகத் தற்கொலை பண்ணிக்கப்போறேன்னு சொல்லிட்டாவது செய்யலாமில்லே? நாளைக்கு இத வச்சு ஒரு இடுகை போட்டு நானும் பொழச்சுக்குவேனில்லே?"

"அப்படீன்னா நீதான் சேட்டைக்காரனா?"

"எப்படி ராசா கண்டுபிடிச்சே?"

"பின்னே, என்னைப் பத்தி புத்திசாலியா இடுகை போடுவாங்க?"

"சே! முதல்லே என் வாயிலே குடியிருக்கிற சனியனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பணும். அதை விடு, இப்போ எதுக்குத் தற்கொலை பண்ணிக்கப்போறே, அதைச் சொல்லு!"

"ரெண்டு நாளைக்கு முன்னாலே கலைமாமணி விருது கொடுத்தாங்க தெரியுமா சேட்டை?"

"ஓ! நல்லாத் தெரியுமே! அனுஷ்கா, தமன்னா, ஆர்யா உள்பட 74 பேருக்கு கலைமாமணி விருது கொடுத்திருக்காங்க! அதுக்கென்ன இப்போ? உனக்குக் கொடுக்க மறந்திட்டாங்களா? அதுக்காக நீ செத்துட்டா உனக்கு கலைமாமணி கிடைக்காதப்பு; தற்-கொலைமாமணி விருது தான் கிடைக்கும்!"

"சும்மாயிரு சேட்டை! வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சாதே! எனக்குக் கொடுக்காட்டியும் பரவாயில்லை! ஆனா சோனாவுக்குக் கொடுக்காம அநீதி இழைச்சிட்டாங்களே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!"

"என்னது சோனாவா? யாருய்யா அது?"

"நடிகை சோனா யாருன்னா கேட்கறே? நீ அடுத்த பிறவியிலே உ.பியிலே டி.எஸ்.பியாத் தான் பொறக்கப்போறே!"

"அப்படியெல்லாம் சாபம் போட்டுராதே! என்னோட ஷூவையே நான் துடைக்கிறதில்லை; மாயாவதி ஷூவையெல்லாம் எப்படித்துடைக்கிறதாம்? சோனாவுக்கு எதுக்கு கலைமாமணி கொடுக்கணும்? அவங்களுக்கும் கலைக்கும் என்ன தொடர்பு? தெரியாமக் கேட்கிறேனப்பு...."

"என்னய்யா பெரிய தொடர்பு? எங்க சோனா ஹைடனைப் பத்தி என்னன்னு நினைச்சே? கலைஞர் வீட்டுக்குப் போயி நேருக்கு நேரா சந்திச்சு, போட்டோவெல்லாம் எடுத்திருக்காங்க தெரியுமா? இதோ பாரு!"


"அட ஆமா, அவரு வீட்டுக்கு எல்லாராலேயும் போக முடியுமா என்ன, இவ்வளவு பக்கத்துலே உட்கார்ந்துக்கிட்டு போஸெல்லாம் கொடுத்ததுக்கப்புறமும் கலைமாமணி கொடுக்கலியா? இது உண்மையிலேயே பெரிய அநீதி தானப்பு..!"

"சும்மா ஒண்ணும் போகலே! சொளையா அஞ்சுலட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கியிருக்காங்க தெரியுமா?"

"என்னது, அஞ்சு லட்சமா? அதுக்கு தமிழ்நாட்டுலே ஒரு குடும்பத்துக்கே டாக்டர் பட்டம் கிடைக்குமே?"

"டாக்டர் பட்டமெல்லாம் எங்க தலைவிக்கு எம்மாத்திரம் சேட்டை? அவங்களுக்கெல்லாம் ஒரு மரியாதையிருக்கு! அவங்க எவ்வளவு புரட்சிகரமான சிந்தனையுள்ள பெண் தெரியுமா? அவங்க வாயைத் திறந்தாப்போதும், உடனே இந்து மக்கள் கட்சி சிவசேனாவெல்லாம் போராட்டத்துலே இறங்கிருவாங்க! அவ்வளவு புதுமையான சிந்தனையுள்ள பெண்மணி அவங்க!"

"இத பாரப்பு, சிவசேனாவையெல்லாம் தமிழ்நாட்டுலே யாரும் சீரியஸா எடுத்துக்கமாட்டாங்க, இப்போ காதலர் தினம் கொண்டாடக்கூடாதுன்னு மதுரையிலே ஆர்ப்பாட்டம் பண்ணினாங்க தெரியுமா? அதுலே மொத்தமே முப்பது பேரு தான் இருந்தாங்களாம். அதுலேயும் இருபத்தி ஒன்பது பேரு போலீஸுன்னு பேசிக்கிறாங்க!"

"அப்படீன்னா புரட்சிப்பெண்களுக்கு தமிழ்நாட்டுலே மரியாதையே கிடைக்காதா?"

"எப்படிக் கிடைக்கும்? நாலு கோர்ட் ஏறி எறங்கியிருக்கணும். நாப்பது கேசு பார்த்திருக்கணும். தமிழ்ப்பண்பாடு, கலாச்சாரம், இப்படி எதுனாச்சும் பேசியிருக்கணும். அந்த மாதிரி ஏதாவது பண்ணியிருக்காங்களா?"

"ஓ! நிறையவே பேசியிருக்காங்க சேட்டை! ஆண்களை நம்பாதே ஆனால் ஆண்களில்லாமல் வாழ முடியாதுன்னெல்லாம் நிறையத் தத்துவங்களைக் கண்டுபிடிச்சுச் சொல்லியிருக்காங்க. இதுக்காகக் கூட நொந்த மக்கள் கட்சி, அதாவது இந்து மக்கள் கட்சி போராட்டமெல்லாம் நடத்தியிருக்காங்க!

"அட, இவ்வளவு பெரிய ஆளா அவங்க? ஒருவேளை தமிழ் தெரியாதுன்னு கலைமாமணி கொடுக்காம விட்டுட்டாங்களோ?"

"ஆமாம் அவங்க ஆங்கிலோ இந்தியப்பொண்ணுதான்! ஏன் கொடுக்கக்கூடாதா? தமன்னா தமிழ்ப்பொண்ணா, அனுஷ்கா தமிழ்ப்பொண்ணா? தமிழ் சினிமாவுலே நடிக்க சரக்கே வேண்டாமுன்னு சொன்னா ஆர்யா தமிழனா? அவங்களுக்கெல்லாம் கொடுக்கும்போது இவங்களுக்கும் கொடுத்தா என்னவாம் சேட்டை?"

"கரெக்டு தான்! செலவோட செலவா சோனாவுக்கும் ஒரு கலைமாமணி கொடுத்திருக்கலாம். அவங்களும் நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன் கூட போட்டோ எடுத்துக்கிட்டிருப்பாங்க! தமிழ் இலக்கியமும் வளர்ந்திருக்கும். ஒரு நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாங்க!"

"எல்லாத்தையும் கூட விட்டிரலாம் சேட்டை! ஆனா....ஆனா...," என்று குமுறிக்குமுறி அழுதார் அவர்.

"அழாம சொல்லுய்யா! இன்னும் என்ன...?"

"சோனா ஒரு தமிழ்ப்படம் எடுக்கிறாங்க! அதுக்கு ’கனிமொழி’ன்னு பேரு வச்சிருக்காங்க! அதோட பாடல்களைக் கூட கலைஞர் வெளியிடுவார்னு சொல்லிட்டிருந்தாங்க!"

"என்னது?" நான் அதிர்ந்தேன். "தம்பி, நீ கடைசியா சொன்னதைக் கேட்டதுக்கப்புறம் எனக்கே சோனா மேலே ஒரு பரிதாபம் வந்திருச்சு! ஆனா, அதுக்காக நீ சாகணுமா? நம்ம நாட்டுலே கண்டனம் தெரிவிக்க எத்தனையோ வழியிருக்கே? உதாரணத்துக்கு நம்ம மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுஹாண் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறதுக்காக, இருபது நிமிஷம் உண்ணாவிரதம் இருந்தாரு! நீங்களும் ஒரு அரை மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து அவரோட ரிகார்டை பிரேக் பண்ணியிருக்கலாமே?"

"அவரோட ரிகார்டை என்னாலே எப்படி பிரேக் பண்ண முடியும் சேட்டை?"

"ஏனப்பு, ஒரு அரைமணி நேரம் சாப்பிடாம இருக்க முடியாதா?"

"அது முடியும். ஆனா, அவரோட இருபது நிமிஷ உண்ணாவிரதத்துக்கு ஆன செலவு ரெண்டு கோடி ரூபாய். அதுக்கெங்கே போவேன்?"

"ஓஹோ! இப்படியொண்ணிருக்கோ?"

"இப்போ சொல்லு சேட்டை! எங்க தலைவி சோனாவுக்கு கலைமாமணி தராதது எவ்வளோ பெரிய கொடுமை? இது தெரியாம ஜெயகாந்தன் கூட ’இது தமிழர்களுக்கு பொற்காலம்,’னு சொல்லியிருக்காரே?"

"அதையெல்லாம் சட்டை பண்ணாதீங்க! ஜெயகாந்தன் "இது எனக்கு பொற்காலம்,"னு உண்மையையா சொல்ல முடியும் பாவம்? அதான் நம்ம முதல்வரே சொல்லிட்டாரே! அடுத்தவாட்டி கலைஞர் முதல்வரானா ஒவ்வொரு வருஷமும் 225 பேருக்கு கலைமாமணி விருது தருவாராம். அப்புறம் நீயும் கலைமாமணி; நானும் கலைமாமணியாயிடுவேன்."

"ஊஹும்! அதெல்லாம் செல்லாது! எங்க தலைவிக்கு இப்பவே கலைமாமணி வேணும். இல்லாட்டா நான் சாகப்போறேன்!"

"உம் சரி, நான் இவ்வளவு சொல்லியும் கேட்கலேன்னா என்ன பண்ணுறது? சரி, உன் இஷ்டம் போல சாவு!"

"இதை முதல்லேயே சொல்லியிருக்கலாமில்லே சேட்டை? பாரு, என் டிரஸெல்லாம் காய்ஞ்சு போச்சு! இரு இன்னும் ரெண்டு பக்கெட்டிருக்கு! அதையும் ஊத்திக்கிறேன்!"

"அடக் கிறுக்கா! தீக்குளிக்கிறேன்னு சொல்லிட்டு என்னடா வாளியிலே இருக்கிற தண்ணியை தலையிலே ஊத்திக்கிறே?" நான் அதிர்ந்தேன்.

"நல்லாப் பாரு சேட்டை! ரெண்டு சிவப்பு வாளியிலேயும் என்ன எழுதியிருக்கு? ’தீ’ன்னு தானே எழுதியிருக்கு? இதோ நான் தீக்குளிக்கப்போறேன்! தீக்குளிக்கப்போறேன்!"

ஐயோ சாமீ! இம்புட்டு நேரம் ஒரு லூஸோடவா பேசிட்டிருந்தேன்?

45 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

haaa.... sema kikku.... last lines .. mudiyala.... i am still laughing

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாய் விட்டுச் சிரிச்சுக்கிட்டே இருக்கேன். நீங்க யாரு எங்கே இருக்கீங்கன்னு தெரிஞ்சா ஓடி வந்து கட்டிப் புடிச்சுக்கணும் போல இருக்கு. அதை நீங்க சீககிரமா தெரிவிக்காவிட்டால், நானும் தீக்குளிக்க ஆரம்பிப்பேன், அப்போதும் நீங்க என்னைத் தேடி வரணுமே, அதனால் தான் யோசிக்கிறேன்..

சி.பி.செந்தில்குமார் said...

>>ஆனா, அவரோட இருபது நிமிஷ உண்ணாவிரதத்துக்கு ஆன செலவு ரெண்டு கோடி ரூபாய். அதுக்கெங்கே போவேன்?"

haa haa ஹா ஹா சேட்டை ஸ்பெஷல் டச்

சி.பி.செந்தில்குமார் said...

>>>>"அப்படியெல்லாம் சாபம் போட்டுராதே! என்னோட ஷூவையே நான் துடைக்கிறதில்லை; மாயாவதி ஷூவையெல்லாம் எப்படித்துடைக்கிறதாம்?

டைமிங்க் ஜோக்

சி.பி.செந்தில்குமார் said...

"சோனா ஒரு தமிழ்ப்படம் எடுக்கிறாங்க! அதுக்கு ’கனிமொழி’ன்னு பேரு வச்சிருக்காங்க!

இதை மட்டும் எடுக்க முடியாது... ஏன்னா ஏற்கனவே ஜெய் நடிக்க அதே பேர்ல ஒரு டப்பா படம் வந்தாச்சு

தமிழ்வாசி பிரகாஷ் said...

machi super!!!!

vasu balaji said...

முடியலடா சாமி:))))

எல் கே said...

உன்னை கொளுதனும்யா முதலில்

Unknown said...

//"சோனா ஒரு தமிழ்ப்படம் எடுக்கிறாங்க! அதுக்கு ’கனிமொழி’ன்னு பேரு வச்சிருக்காங்க! அதோட பாடல்களைக் கூட கலைஞர் வெளியிடுவார்னு சொல்லிட்டிருந்தாங்க!"//
படம் வந்து போனது தெரியாத மாதிரி 'சேட்டை' பண்றதுலயும் ஒரு கிக் இருக்குது..

பொன் மாலை பொழுது said...

எங்கய்யா உக்காந்து யோசிப்பீங்க? சும்மா பொளந்து கட்டுறீங்க சேட்ட. எனக்கு ஒரு மகா வருத்தம். தமிழ் வலைபூக்களில் வரும் இது போன்ற தொடர்களை நம் அரசியல் வாதிகள் வாசிக்கவில்லையே என்று. ஒரு வேலை அப்படி வாசிக்கும் நேரத்தில் நூத்துக்கு அஞ்சாவது தேறும் என்ற நப்பாசைதான். கடைசி பாராவில் விஷயம் வெடிக்க .........போதும். :)))

சக்தி கல்வி மையம் said...

வாய் விட்டுச் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.நம்ம கடை பக்கம் ஒர் விசிட் அடிக்கிறது..

Chitra said...

"அட ஆமா, அவரு வீட்டுக்கு எல்லாராலேயும் போக முடியுமா என்ன, இவ்வளவு பக்கத்துலே உட்கார்ந்துக்கிட்டு போஸெல்லாம் கொடுத்ததுக்கப்புறமும் கலைமாமணி கொடுக்கலியா? இது உண்மையிலேயே பெரிய அநீதி தானப்பு..!"

"சும்மா ஒண்ணும் போகலே! சொளையா அஞ்சுலட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கியிருக்காங்க தெரியுமா?"

"என்னது, அஞ்சு லட்சமா? அதுக்கு தமிழ்நாட்டுலே ஒரு குடும்பத்துக்கே டாக்டர் பட்டம் கிடைக்குமே?"


..... Ultimate touch!!!!!
சான்சே இல்லை.... சிரிச்சு சிரிச்சு ......முடியல....

Speed Master said...

அடகொடுமையே


நம்ப பதிவையும் எட்டிப்பாருங்க

நாய் உண்மையில் என்ன நினைக்கிறது

http://speedsays.blogspot.com/2011/02/blog-post_16.html

சிநேகிதன் அக்பர் said...

வாழைப்பழத்துல ஊசி ஏத்துறது இப்படித்தானா :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஐயோ சாமீ! இம்புட்டு நேரம் ஒரு லூஸோடவா பேசிட்டிருந்தேன்?///

ஐயோ சாமீ! இம்புட்டு நேரம் ஒரு லூஸோட பதிவாபடிச்சிக்கிட்டு இருந்தேன்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

"சோனா ஒரு தமிழ்ப்படம் எடுக்கிறாங்க! அதுக்கு ’கனிமொழி’ன்னு பேரு வச்சிருக்காங்க!

இதை மட்டும் எடுக்க முடியாது... ஏன்னா ஏற்கனவே ஜெய் நடிக்க அதே பேர்ல ஒரு டப்பா படம் வந்தாச்சு//

சிபி அந்த படம்தான் இது. கனிமொழி படத்தோட தயாரிப்பாளர் சொனாதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஐயோ சாமீ! இம்புட்டு நேரம் ஒரு லூஸோடவா பேசிட்டிருந்தேன்?///

ஐயோ சாமீ! இம்புட்டு நேரம் ஒரு லூஸோட பதிவாபடிச்சிக்கிட்டு இருந்தேன்?

settaikkaran said...

//மாத்தி யோசி said...

haaa.... sema kikku.... last lines .. mudiyala.... i am still laughing//

ஆங்கிலத்துலே எழுதிருக்கீங்களா? sema ங்கிறதை நான் சீமான்னு படிச்சுட்டேன்.:-)
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

வாய் விட்டுச் சிரிச்சுக்கிட்டே இருக்கேன். நீங்க யாரு எங்கே இருக்கீங்கன்னு தெரிஞ்சா ஓடி வந்து கட்டிப் புடிச்சுக்கணும் போல இருக்கு. அதை நீங்க சீககிரமா தெரிவிக்காவிட்டால், நானும் தீக்குளிக்க ஆரம்பிப்பேன், அப்போதும் நீங்க என்னைத் தேடி வரணுமே, அதனால் தான் யோசிக்கிறேன்..//

ஐயையோ, தீக்குளிச்சிராதீங்க! சென்னையிலேதானிருக்கேன். சந்திக்கலாம்...சந்திக்கலாம்! :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா சேட்டை ஸ்பெஷல் டச்//

நன்றி தல! :-)

//டைமிங்க் ஜோக்//

டூ-இன்-ஒன் தல! இதுக்குன்னு இன்னொரு இடுகை போட வேண்டாம் பாருங்க!

////"சோனா ஒரு தமிழ்ப்படம் எடுக்கிறாங்க! அதுக்கு ’கனிமொழி’ன்னு பேரு வச்சிருக்காங்க!////

//இதை மட்டும் எடுக்க முடியாது... ஏன்னா ஏற்கனவே ஜெய் நடிக்க அதே பேர்ல ஒரு டப்பா படம் வந்தாச்சு//

ஓஹோ! இந்த மேட்டருலே நான் கொஞ்சம், இல்லை, ரொம்பவே வீக்! இனிமேல் இன்னொருவாட்டி செக் பண்ணிக்கிறேன். மிக்க நன்றி தல!

settaikkaran said...

//தமிழ்வாசி - Prakash said...

machi super!!!!//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வானம்பாடிகள் said...

முடியலடா சாமி:))))//

ஐயா, மிக்க நன்றி ஐயா! :-)

settaikkaran said...

//எல் கே said...

உன்னை கொளுதனும்யா முதலில்//

நாட் ய பேட் ஐடியா! ட்ரை பண்ணுங்க கார்த்தி! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//ஆகாயமனிதன்.. said...

படம் வந்து போனது தெரியாத மாதிரி 'சேட்டை' பண்றதுலயும் ஒரு கிக் இருக்குது..//

ஒஹோ! இப்படியும் இருக்குதா? நான் அப்படி யோசிச்சு எழுதலே! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

எங்கய்யா உக்காந்து யோசிப்பீங்க?//

ஆபீஸ்லே தான்! :-))

//சும்மா பொளந்து கட்டுறீங்க சேட்ட. எனக்கு ஒரு மகா வருத்தம். தமிழ் வலைபூக்களில் வரும் இது போன்ற தொடர்களை நம் அரசியல் வாதிகள் வாசிக்கவில்லையே என்று.//

ஆட்டோவோ சுமோவோ அனுப்பிர மாட்டாங்க? :-)))

//ஒரு வேலை அப்படி வாசிக்கும் நேரத்தில் நூத்துக்கு அஞ்சாவது தேறும் என்ற நப்பாசைதான்.//

ஆனாலும், இவ்வளவு நேர்மறையான எண்ணங்கள் இருக்கப்படாதுங்க நண்பரே! சரி, இப்படியும் நம்பிக்கையிருக்கிறவங்க வேணும்தானே? :-)

//கடைசி பாராவில் விஷயம் வெடிக்க .........போதும். :)))//

தாராளமான பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//sakthistudycentre-கருன் said...

வாய் விட்டுச் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.நம்ம கடை பக்கம் ஒர் விசிட் அடிக்கிறது..//

மிக்க நன்றி நண்பரே! வந்து ஒரு கட்டிங் (டீ தான!) அடிச்சிட்டேனே? :-))

settaikkaran said...

//Chitra said...

..... Ultimate touch!!!!! சான்சே இல்லை.... சிரிச்சு சிரிச்சு ......முடியல....//

மிக்க நன்றி! உங்களது "கல்யாணம்தான் கட்டிக்கிட்டு...." இடுகையும் கலக்கல்! :-)

settaikkaran said...

//Speed Master said...

அடகொடுமையே நம்ப பதிவையும் எட்டிப்பாருங்க//

மிக்க நன்றி! உங்க பதிவைப் பார்த்தேனே! :-))

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

வாழைப்பழத்துல ஊசி ஏத்துறது இப்படித்தானா :)//

ஓஹோ, இதுதானா அது? மிக்க நன்றி அண்ணே! :-)

settaikkaran said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஐயோ சாமீ! இம்புட்டு நேரம் ஒரு லூஸோட பதிவாபடிச்சிக்கிட்டு இருந்தேன்?//

என்ன பண்ணுறது, ஐயோ பாவம் ரொம்ப நல்லவனாச்சேன்னு ஒரு லூஸைப் போயிக் காப்பாத்தப் போயிட்டேன். :-))

//சிபி அந்த படம்தான் இது. கனிமொழி படத்தோட தயாரிப்பாளர் சொனாதான்//

யானைக்கும் அடிசறுக்குமுன்னுறது இதுதானா சி.பி.எஸ்.தல? :-))

//ஐயோ சாமீ! இம்புட்டு நேரம் ஒரு லூஸோட பதிவாபடிச்சிக்கிட்டு இருந்தேன்?//

சொன்னதையே திரும்பத் திரும்ப யாரு சொல்லுவாங்க தெரியுமா? :-)))

மிக்க நன்றி!

Jayadev Das said...

கலை"மாமா"மணி விருது, இன்னொரு மானங்கெட்ட வேலை. கசப்பான இந்த விஷயத்தை காமெடி என்னும் இனிப்பு கலந்து கொடுத்திருக்கிறீர்கள். சிரித்துக் கொண்டே படித்தேன், அங்கங்கே மரண அடி கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் இந்த எருமைத் தோல் கொண்டவர்களுக்கு இது பீல் ஆகவே ஆகாது!
//இது தெரியாம ஜெயகாந்தன் கூட ’இது தமிழர்களுக்கு பொற்காலம்,’னு சொல்லியிருக்காரே?"// ஸ்டாலின், மு.க.அழகிரி,[அப்புறம் இவங்களோட மகன்/மகள்கள், பேரன்/பேத்திகள்], கனிமொழி,கலாநிதி மாறன், தயாநிதி மாறன் இவங்க எல்லோருமே தமிழர்கள்தானுங்கோவ்.. இவங்க எல்லாத்துக்கும் இது பொற்க்காலமுங்கண்ணோவ் ..!!

கும்மாச்சி said...

சேட்டை, அடுத்தமுறை நம்ம ஆளு ஷகீலாவுக்கும் கலைமாமணி கேட்டு ஏதாவது லூசு பயலை தீக்குளிக்க சொல்லுங்கள்.

சௌமியா said...

இன்று உங்களது பல இடுகைகளை வாசித்து வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தேன். உங்களது நகைச்சுவை உணர்வுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
--
http://sowmaitri.blogspot.com

Unknown said...

அக்மார்க் சேட்டை பதிவு சார் இது, சூப்பரோ சூப்பர்

settaikkaran said...

//Jayadev Das said...

கலை"மாமா"மணி விருது, இன்னொரு மானங்கெட்ட வேலை. கசப்பான இந்த விஷயத்தை காமெடி என்னும் இனிப்பு கலந்து கொடுத்திருக்கிறீர்கள். சிரித்துக் கொண்டே படித்தேன், அங்கங்கே மரண அடி கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் இந்த எருமைத் தோல் கொண்டவர்களுக்கு இது பீல் ஆகவே ஆகாது!//

அந்த எதிர்பார்ப்பெல்லாம் இல்லை நண்பரே! இது போன்ற கூத்துக்கள் குறித்த எனது ஆட்சேபங்களை எனக்குத் தெரிந்தவகையில் வெளிப்படுத்தியிருக்கிறேன். அவ்வளவே!

// //இது தெரியாம ஜெயகாந்தன் கூட ’இது தமிழர்களுக்கு பொற்காலம்,’னு சொல்லியிருக்காரே?"// ஸ்டாலின், மு.க.அழகிரி,[அப்புறம் இவங்களோட மகன்/மகள்கள், பேரன்/பேத்திகள்], கனிமொழி,கலாநிதி மாறன், தயாநிதி மாறன் இவங்க எல்லோருமே தமிழர்கள்தானுங்கோவ்.. இவங்க எல்லாத்துக்கும் இது பொற்க்காலமுங்கண்ணோவ் ..!!//

ஆமா, இதை எப்புடி நான் மிஸ் பண்ணினேன்? தெரிஞ்சிருந்தா இதையும் வைச்சு கூட ஒரு பிட்டு போட்டிருப்பேனே? :-)))

வருகைக்கும் கருத்துக்கும் (அதற்கு எடுத்துக்கொண்ட நேரத்துக்கும்) மிக்க நன்றி!

settaikkaran said...

//கும்மாச்சி said...

சேட்டை, அடுத்தமுறை நம்ம ஆளு ஷகீலாவுக்கும் கலைமாமணி கேட்டு ஏதாவது லூசு பயலை தீக்குளிக்க சொல்லுங்கள்.//

என்னது நம்ம ஷகீலாவா? சரி இருக்கட்டும். பெருந்தன்மையோடு என்னையும் சேர்த்துக்கிட்டீங்க! அடுத்தவாட்டி கண்டிப்பா எவனையாவது சாகடிச்சாவது ஷகீலாவுக்கு கலைமாமணி வாங்கிக்கொடுத்திரலாம்.

மிக்க நன்றிண்ணே! :-)

settaikkaran said...

//சௌமியா said...

இன்று உங்களது பல இடுகைகளை வாசித்து வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தேன். உங்களது நகைச்சுவை உணர்வுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.//

உளமாறப்பாராட்டிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! தொடர்ந்து வாசிக்க வாருங்கள்! :-)

settaikkaran said...

//இரவு வானம் said...

அக்மார்க் சேட்டை பதிவு சார் இது, சூப்பரோ சூப்பர்//

ஆஹா! உங்க பாராட்டு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி! :-)

Philosophy Prabhakaran said...

சோனாவுக்கு விருது இல்லையா... எனது கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சேட்டையோட ட்ரேட் மார்க் கலக்கல்..... பின்னிட்டீங்க பாஸ்...... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சோனாவுக்கு கலைமாமணி கொடுக்காததை நானும் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு ஒரு தனி ட்வீட்டர் போராட்டம் துவங்கி முன்னெடுத்துச் செல்ல சேட்டை அவர்களை தலைமை தாங்க அழைக்கிறேன்...

Ponchandar said...

அண்மை கால நிகழ்வுகளை அருமையாக எழுத்தில் கொண்டு வந்து அசத்திவிட்டீர்கள் ! ! ! !

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

சோனாவுக்கு விருது இல்லையா... எனது கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்...//

ஆஹா, நம்ம கட்சிக்குக் கூட ஆளு இருக்கா? மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சேட்டையோட ட்ரேட் மார்க் கலக்கல்..... பின்னிட்டீங்க பாஸ்...... !//

வாங்க பானா ராவன்னா, எல்லாம் உங்களோட ஊக்குவிப்புதான்....!

//சோனாவுக்கு கலைமாமணி கொடுக்காததை நானும் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு ஒரு தனி ட்வீட்டர் போராட்டம் துவங்கி முன்னெடுத்துச் செல்ல சேட்டை அவர்களை தலைமை தாங்க அழைக்கிறேன்...//

முதல்லே எனக்கும் அந்த ஐடியா இருந்திச்சு. ஆனா, மெய்யாலுமே கொடுத்துத் தொலைச்சிட்டா என்ன பண்ணுறதுன்னு பயந்துபோய் சும்மாயிருந்திட்டேன்!

மிக்க நன்றி பானா ராவன்னா!

settaikkaran said...

//Ponchandar said...

அண்மை கால நிகழ்வுகளை அருமையாக எழுத்தில் கொண்டு வந்து அசத்திவிட்டீர்கள் ! ! ! !//

தொடரும் உங்களது ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)