Friday, July 30, 2010

ஜப்பான் சொன்னா கேட்டுக்கணும்!

"கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக்கூடாது,"ன்னு ஒரு பழமொழி இருக்குது. இந்த ஜப்பான்காரங்களை எடுத்துக்கோங்க! அவங்க தான் சின்ன சைஸுன்னா, அவங்க தயாரிக்கிற பொருள் அதை விட சிறுசா இருக்குது.

இப்படித்தான் ஒரு ஜப்பான்காரரு, ஒரு ஹோல்டாலை மாட்டிக்கினு அமெரிக்கா போனாரு. அங்கே ஒரு அமெரிக்கரு இவர்கிட்டே எம்பயர் ஸ்டேட் பில்டிங்கைக் காட்டி, "இதோ பார்த்தியா நைனா? இதுக்குப் பேருதான் எம்பயர் ஸ்டேட் பில்டிங்! இது மாதிரி ஒண்ணை உங்களாலே கட்ட முடியுமா?"ன்னு கேட்டாராம். உடனே இந்த ஜப்பான்காரரு ஹோல்டாலைத் தொறந்து விடுவிடுன்னு என்னத்தையோ எடுத்து நட்டு, போல்ட்டு, ஸ்க்ரூ அல்லாத்தையும் போட்டு முறுக்கினா...! பாவி மனுசன், ஹோல்டாலுக்குள்ளே ஒரு பில்டிங்கையே கொண்டு வந்திருக்காருன்னு அமெரிக்காக்காரனுக்கு அப்போதான் தெரிஞ்சுதாம். அதுவும் எப்படி? எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை விட உசரமா ஒரு கட்டிடத்தை மடக்கி, சுருட்டி ஹோல்டாலுக்குள்ளே குள்ளன் கொணாந்திருக்காரு!

அத்தெல்லாம் சரி, இப்போ எதுக்கு ஜப்பான் புராணமுன்னு கேட்கறீங்களா? கேளுங்கய்யா இந்தக் கொடுமையை..! ஜப்பான் நாட்டு பிரதமர் நவோட்டா கான் பத்தி அவரோட மனைவி நொபூகாகான் ஒரு புத்தகம் எழுதியிருக்காங்களாம். பிரதமர் பதவிக்கு எனது கணவர் பொருத்தமானவர் அல்ல-ஜப்பான் பிரமதரின் மனைவி

"எங்க வூட்டுக்காரரு ஏதோ குருட்டாம்போக்குலே பிரதமராயிட்டாரு! இந்த மனிசனுக்கு இதெல்லாம் தோதுப்பட்டு வராது,"ன்னு பொட்டுலே அடிச்சாப்புலே புத்தகத்துலே சொல்லிப்புட்டாரு. கடுகு சிறுத்தாலும் காரம் குறையலே பார்த்தீங்களா?

பிரதம மந்திரி பாவம், நொந்து போயிட்டாரு! என்ன இருந்தாலும் புருசனை இப்படியா பொதுவுலே போட்டுக் கொடுக்குறது?

"இன்னும் என் பொஞ்சாதி உள்ளாற என்னென்னத்தை எழுதித்தொலைச்சிருக்குதோ, படிக்கவே பயமாயிருக்கு மக்கா,"ன்னு புலம்பிட்டுத் திரியுறாராம்.

(யாருய்யா அது,குத்துங்க எசமான், குத்துங்க; இந்தப் பொம்பளைங்களே இப்புடித்தான்,’ன்னு சவுண்டு விடுறது?)

இருந்தாலும் நமக்கெல்லாம் ஜப்பான் மோகம் கொஞ்சம் அதிகமாச்சே! இதைக் கேள்விப்பட்டவுடனே இங்கேயும் அந்த மாதிரி ஏதாவது டகால்டி வேலை பண்ணனும்முன்னு தோணுமா தோணாதா....?

ஆனா, நம்ம ஊருலே இப்படியெல்லாம் புத்தகம் எழுத முடியுமா? பொங்கி எழுந்திர மாட்டாங்க? அப்படியே யாராச்சும் எழுதினாலும் நாமதான் காசுகொடுத்து வாங்கிப் படிக்கப்போறமா? அப்புறம், தலீவருங்களோட மனைவிங்க எழுதவா போறாங்க?

சரி, நாமளே நம்ம தலீவருங்களைப் பத்தி ஆளுக்கு ஒண்ணா புத்தகம் போட்டா என்ன? சினிமாப் பெயரிலே புத்தகத்துக்குத் தலைப்பு வச்சா மெரீனாவுலே மிளகா பஜ்ஜி விக்குறா மாதிரி வித்துப்புடாது...? இதோ.....!

யார் புத்தகம் எழுதணுமுன்னு நினைச்சாலும் கீழே கொடுத்திருக்கிற பட்டியலிலேருந்து எடுத்துக்கோங்க! ஆனா, இதை நான் தான் கொடுத்தேன்னு மட்டும் வேறே யார் கிட்டேயும் சொல்லிராதீங்க? ஓ.கே??

என்ஜாய்! :-)

1. பிரதம மந்திரி மன்மோகன் சிங்-அன்னையின் ஆணை

2. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீ-வரவு எட்டணா; செலவு பத்தணா

3. உணவுத்துறை-ஷரத் பவார்-லண்டன் ட்ரீம்ஸ் (இந்தி)

4. பாதுகாப்பு-ஏ.கே.ஆன்டனி-வேட்டி மடிச்சுக் கட்டு

5. உள்துறை-மாண்புமிகு.ப.சிதம்பரம்-யாருக்கு யார் காவல்?

6. சட்டத்துறை-வீரப்பமொய்லி-இரும்புத்திரை

7. இரயில்வே-மம்தா பேனர்ஜீ-கிழக்கே போகும் ரயில்

8. கப்பல்துறை-ஜி.கே.வாசன்-நங்கூரம்

9. ஜவுளித்துறை -தயாநிதி மாறன்-ஆசை அண்ணா அருமைத் தம்பி

10.தொலைதொடர்புத்துறை -ஏ.ராசா-பலே பாண்டியா

11.பெட்ரோலியத்துறை -முரளி தியோரா-பட்டாக்கத்தி பைரவன்

12.தகவல்துறை-அம்பிகா சோனி-கேஸ்லைட் மங்கம்மா

13.மனிதவளத்துறை-கபில் சிபல்-ஸ்கூல் மாஸ்டர்

14. சுற்றுச்சூழல்-ஜெயராம் ரமேஷ்-திக்குத் தெரியாத காட்டில்

15. ரசாயனத்துறை- மு.க.அழகிரி-ராஜா வீட்டுப்பிள்ளை

16.வெளியுறவுத்துறை எஸ்.எம்.கிருஷ்ணா-ஊமை விழிகள்

17. தமிழக முதல்வர். கலைஞர்.மு.கருணாநிதி-குடும்பத்தலைவன்

18. உ.பி.முதல்வர்.செல்வி.மாயாவதி-நான் கடவுள்

16.ஜே.டி.லாலு பிரசாத் யாதவ்-கோமாதா என் குலமாதா

17. முன்னாள் கவர்னர். திரு.என்.டி.திவாரி-ஓடி விளையாடு தாத்தா

18.அ.தி.மு.க.பொதுச்செயலாளர்.செல்வி.ஜெயலலிதா-மலைநாட்டு மங்கை

19. பா.ஜ.க.தலைவர். எல்.கே.அத்வானி-வாழ்வே மாயம்

20. எம்.என்.எஸ்.தலைவர். ராஜ் தாக்கரே-நான் பேச நினைப்பதெல்லாம்.

21. சிவ்சேனா தலைவர்.பால் தாக்கரே-காசி யாத்திரை

22. பா.ம.க.நிறுவனர். டாக்டர்.ராமதாஸ்-சுகம் எங்கே?

23. டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்-நல்லதுக்குக் காலமில்லை

24. ம.தி.மு.க.தலைவர் வை.கோ-யாருக்காக அழுதான்?

25.கம்யூனிஸ்ட் தலைவர்.தா.பாண்டியன்-மிருதங்கச் சக்கரவர்த்தி

26. நடிகர்.சரத்குமார்(கட்சி பேரு மறந்திட்டேன்!)-அழைத்தால் வருவேன்

27. பா.ஜ.க.மாநிலச்செயலாளர்.இல.கணேசன்-ஒற்றையடிப் பாதையிலே

28.மேற்குவங்க முதல்வர். புத்ததேவ் பட்டாச்சார்யா-வறுமையின் நிறம் சிவப்பு

29. நடிகை விஜயசாந்தி-சவுக்கடி சந்திரகாந்தா

30. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்-ஆளுக்கொரு ஆசை

31. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்-வாய்க்கொழுப்பு

32. இந்தியக் குடிமகன்-வாயில்லாப் பூச்சி


கடைசியாக......

33. சேட்டைக்காரன் -நாளை உனது நாள்

(ஆட்டோ அல்லது உளவுத்துறை வருமில்லே!)

10 comments:

Jey said...

hahahahahaa. title ellaamee taappu:)

sathishsangkavi.blogspot.com said...

சேட்டையின் சேட்டை கலக்கல்....

அநேகமா ஸ்கார்ப்பியோ வரும்....

Chitra said...

அய்யா, நீர் புலவர்..... நீர் பதிவர்..... நீரே நாம கர்ண திலகம்!!!!!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்ப்ப்ப்ப்ப்ப்ரு....

Mahi_Granny said...

ஜப்பானைப் பற்றித் தான் ஏதோ சொல்ல வருகிறீர்கள் என நினைத்தால் இப்படி செய்து விட்டு விட்டீர்கள். சரியான சேட்டை தான்

மங்குனி அமைச்சர் said...

அது என்னாப்பு பா.மா.கா வுக்கு மட்டும் ஏதோ மஞ்சள் பத்திரிகை மாதிரி இருக்கு ?
(அப்பாட கொத்துவிட்டாச்சு , இனி நீ போகனுமின்னு நினைச்சாலும் முடியாதுப்பு )

tamilcinemablog said...

. thanks for sharing this quality content, we will wait for more..
by
http://tamilcinemablog.com/

tamilcinemablog said...

. thanks for sharing this quality content, we will wait for more..
by
http://tamilcinemablog.com/

nakkeeran said...

அன்பு சேட்டை புத்தக பட்டியல் சூப்பர்
நட்புடன் நக்கீர்ன்

Coupon Blogger Jay said...

very very useful blog.. i just shared it with my gmail friends list.. thanks


anushka shetty