(இது "கமல"ர்களுக்குப் புரியும் என்று தான் எழுதியிருக்கிறேன்!)
கவிதைகளென்றுதான் காதினில் ஈயம்
கலந்து கொட்டிடும் மாந்தரைக் கண்டால்
கண்கள் மூடிடும் பெருவரம் வேண்டும்!
ஆனையின் சாணியை மிதித்துபோலே
அருவருப்பின்றிச் சென்றிடல் வேண்டும்
அழுக்குகள் எழுத்தாய் வருகிறபோழ்தில்
அமைதியாய் ஒதுங்கிடும் பொறுமையும் வேண்டும்
இருக்கிற சரக்கை விரிக்கிற அவர்மேல்
இரக்கம்கொள்கிற ஈரமும் வேண்டும்
மேதை நானெனும் பேதையர் பேச்சை
மெத்தனமாகவே கேட்டிடல் வேண்டும்
தானே அனைத்தும் அறிந்தவனென்று
தலைக்கனம் மிகுந்தோர் தம்பட்டமிட்டால்
போய்வா என்றவர் இருப்பிடம் விலகும்
பொன்னான குணமும் வாய்த்திடல் வேண்டும்
நாளும் நடிப்பு நாவில் நெருப்பெனும்
நச்சுப் பாம்பினை ஒறுத்தல் வேண்டும்
சொல்வது ஒன்றாய் செய்வது வேறாய்
சுயநலம்பேசும் மனிதர்கள் சொல்லைச்
சுட்டுப்பொசுக்கிடும் நெருப்பும் வேண்டும்
இப்படிப் பலதும் தரவேண்டும் என
எத்தனையோ நாட்கள் நோம்பு இருந்தேன்
ரதமேறி வருவாள் ராஜலட்சுமியென
சீக்கிரமாய்ப் போனேன் சீனிவாச அய்யங்கார் ஊருக்கு
பரமக்குடியர்களைப் பழித்திடுமொருவனின் ஊராம்
பரமக்குடி எங்கும் பார்த்தேன் சுவரொட்டி
கோவணங்கட்டிய சப்பாணிகள் பலர்
கூட்டம் கூட்டமாய்ப் போவது கண்டேன்
பிட் படங்களின் போஸ்டர்கள் வீட்டில்
சட்டம்போட்டு மாட்டியிருந்தன
அண்ணனின் ஆளுயரப் போஸ்டரின் மேலே
ஆணுறைமாலைகள் போட்டிருந்தார்கள்
மூன்றோ நாலோ முடிந்தவரை மனைவியரைத் தேற்று
முழுப்பூசணியைச் சோற்றில் மறைத்து வாழ்க்கையை ஒப்பேற்று
ஊருக்கு இளைத்த பிள்ளையார்கோவில் ஆண்டியைத் தூற்று!
வரவர கவிதை எழுதித் தொலைப்பவர்
வகைதொகையில்லாமல் மிகமிக அதிகம்
வசூல்ராஜாவே உனக்கு மட்டும் வாட்டசாட்டமாய்
கவிதைப்பொருள் கிடைப்பதெப்படி?
ஆழ்வார்பேட்டையில் அரிசிமண்டியில்
சில்லறையாய் யாரும் விற்கிறார்களோ?
வரைமுறையின்றி வார்த்தையைச் செலவழித்து
வாழுமனிதர் தொழும் தெய்வந்தனை இகழ்ந்து
வக்கிரம்குழைத்துக் கவிதை புனைபவருமுண்டோ?
நம்பிக்கையற்றதனாலேயே நம்புவோர் மனதில்
நஞ்சம்பினைத் தொடுக்கிற கோழையருமுண்டோ?
என்னையும் அதுபோலாக்கு கமலானந்தாவே!
ராஜலட்சுமி ஸ்ரீநிவாசன் நமோஸ்துதே!