Tuesday, August 10, 2010

கீதாஞ்சலி (ஒரு மொழிபெயர்ப்பு முயற்சி)


( இது தமிழ் ஒளி கூகிள் குழுமத்தின் ஆகஸ்ட் மாத மின்னிதழில் பிரசுரிக்கப்பட்டது)

விழித்துக்கொள் தேசமே!

உள்ளமதனில் அச்சமென்னும்
உணர்விலாத தெவ்விடம்
கொள்கைகொண்டு தலைநிமிர்ந்த
கூட்டம்வாழ்வ தெவ்விடம்
கள்வர்போலே சிறையினுள்ளே
கால்விலங்குமின்றியே
வெள்ளம்போலே விரையுஞானம்
வேகங்கொள்வ தெவ்விடம்

சொந்தவீடு ஒன்றுமட்டும்
சொர்க்கமென்று எண்ணிடா
எந்தைதாயை ஈன்றநாட்டில்
இயைந்திருப்ப தெவ்விடம்
நொந்துபோக வைத்திருக்கும்
நோயையொத்த பிரிவினை
வந்திடாது மனிதர்கூடி
வாழ்ந்திருப்ப தெவ்விடம்

வாக்கிலென்றும் மெய்யறங்கள்
வாழ்ந்திருப்ப தெவ்விடம்
ஊக்கமுற்று உண்மைமாந்தர்
உயருகின்ற தெவ்விடம்
தேக்கமற்றுத் தெளியுமுண்மை
தேடுவோர்கள் எவ்விடம்
மாக்களேத்தும் பழமைநீங்கி
மனிதங்காண்ப தெவ்விடம்

விண்ணளாவும் பார்வைகொண்டு
விரியுமுள்ளமொன்று கொண்டு
எண்ணுமோர் இலக்கிலெம்மை
எவ்விடம் இருத்தினாலும்
கண்ணெனுஞ் சுதந்திரத்தைக்
கண்டுயாம் விழித்தெழுந்து
மண்மிசை இருப்பதற்கே
மனமிரங்கி யருளுமையா

Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments
by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the
dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening
thought and action-
Into that heaven of freedom, my Father, let my country awake.

11 comments:

vasu balaji said...

சேட்டை சேட்டை! இம்புட்டு பெரிய ஆளா நீரு! அட அட, சல சலன்னு சின்ன அருவி மாதிரி என்னமா விழுது வார்த்தையும் சந்தமும். அதும் கடைசிப்பத்தி தரையடைந்த அருவி ஓடை மாதிரி. கையைக் கொடுங்க சாமி. கொஞ்சம் இருகப் பிடிச்சிக்கணும்.:)

முகுந்த்; Amma said...

WOw, Great effort. Keep up good work like this.

Unknown said...

உண்மையான கீதாஞ்சலி க்கு நோபல்
இந்த மொழிபெயர்ப்பு கீதாஞ்சலி எழுதியவருக்கு எனா குடுக்கிறது ..அப்பி எண்டு ரூம் போட்டு யோசிக்கிரம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு சேட்டைக்காரன். அருமை. பாராட்டுகள்.

எல் கே said...

vaalthukkal settai

sudhanthira said...

Super,Githanjali tamil translation.congrats for try your level best.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

வெங்கட் நாகராஜ் said...

அழகிய முயற்சி. வார்த்தைகள் அழகாக வந்து பொருந்தி இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

வெங்கட்.

Anonymous said...

பாராட்டப்பட வேண்டிய பதிவு தான்..

//நொந்துபோக வைத்திருக்கும்
நோயையொத்த பிரிவினை
வந்திடாது மனிதர்கூடி
வாழ்ந்திருப்ப தெவ்விடம்//

அர்த்தமுள்ள வார்த்தைகள்..

பொன் மாலை பொழுது said...

சரிதான்,............. ஆனால் இது உங்க ட்ராக் இல்லையே, ஏன் ட்ராக் மாறி போனீர்கள்.?
பழைய சேட்டை தான் எங்களுக்கு வேண்டும். இல்லையேல் போராட்டாம் ஆரம்பிப்போம்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான கவிதைங்க சேட்டை.. இந்தத் திறமையை சேட்டைகளின் நடுவே ஒளித்து விட்டீர்கள் போல..

//வானம்பாடிகள் said...
சேட்டை சேட்டை! இம்புட்டு பெரிய ஆளா நீரு! அட அட, சல சலன்னு சின்ன அருவி மாதிரி என்னமா விழுது வார்த்தையும் சந்தமும். அதும் கடைசிப்பத்தி தரையடைந்த அருவி ஓடை மாதிரி. கையைக் கொடுங்க சாமி. கொஞ்சம் இருகப் பிடிச்சிக்கணும்.:)
//

:))

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,நீங்க வடிவேலு மாதிரி .காமெடில கலக்குங்க.அப்பப்ப இப்படிக்கா வாங்க தப்பில்லை.