Monday, February 8, 2010

திடீர்நகர்

திருவள்ளூரு தாண்டினாக்காக் காடுதான்-அங்கே
திடீர்நகரில் கட்டலாமே வீடுதான்
சதுரஅடி தலா ரூபா பத்துதான்-நல்ல
சமயமிது வாங்கிப்போட்டா சொத்துதான்

தாசில்தாரு தந்துட்டாரு பட்டாதான்-மக்கள்
தலையில்கட்டு குவிஞ்சிடுமே துட்டாத்தான்
தமிழ்நடிகை மூஞ்சி காட்டி விளம்பரம்-சும்மா
தலதெறிக்க ஏமாறத்தான் சனம்வரும்

வெளநெலத்திலே மண்ணப்போட்டு ரொப்பலாம்-லஞ்சம்
வேணும்வரைக்கும் கொடுத்துப்புட்டாத் தப்பலாம்
கலர்கலரா பிட்டுநோட்டீஸ் அடிக்கலாம்-மக்கள்
காசுலேதான் விஸ்கி,ரம்மைக்குடிக்கலாம்

அகப்பட்டதை ஆனவரை சுருட்டலாம்-யாரும்
அதுக்குமேலே கேள்விகேட்டா மிரட்டலாம்
மக்களெல்லாம் மலிவைத்தேடி அலம்புறார்-பின்னாலே
மாரடிச்சு நடுரோட்டுலே புலம்புறார்

14 comments:

Ananya Mahadevan said...

என்ன பண்றது? கசப்பான உண்மை. :(

sathishsangkavi.blogspot.com said...

//அகப்பட்டதை ஆனவரை சுருட்டலாம்-யாரும்
அதுக்குமேலே கேள்விகேட்டா மிரட்டலாம்
மக்களெல்லாம் மலிவைத்தேடி அலம்புறார்-பின்னாலே
மாரடிச்சு நடுரோட்டுலே புலம்புறார்//

சரியாச்சொன்னீங்க.......

சென்ஷி said...

அருமை..

settaikkaran said...

// என்ன பண்றது? கசப்பான உண்மை. :( //

பேராசை பெருநஷ்டமுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க! ஆரு கேட்குறாக?? :-(((

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! அப்புறம்......

அக்காவுக்கும் அத்திம்பேருக்கும் மீண்டுமொரு முறை திருமணநாள் வாழ்த்துக்கள்!

settaikkaran said...

//சரியாச்சொன்னீங்க.......//

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்கண்ணே!!

settaikkaran said...

//அருமை..//

நன்றிங்க!

அண்ணாமலையான் said...

சூப்பர்

settaikkaran said...

//சூப்பர்//

உங்க பெருந்தன்மைக்கு அளவேயில்லீங்க! உங்க பதிவைப் பார்த்து ஏற்பட்ட உந்துதலிலே எழுதினது தான் இது. அண்ணாமலைன்னா மலைதான் நீங்க! நன்றிண்ணே!!

goma said...

கசப்பு மருந்தில் தேன் தடவித் தந்திருக்கிறீர்...
மக்களின் ஏமாளித்தனம் என்ற வியாதி குணமாகப் பிரார்த்திப்போம்

goma said...

என்ன வேணும்னாலும் எழுதலாமா?????

ஹச்ந்ரிஎர்டொக்ட்ஜ்ஃப்ஹ்க்

செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த பாராட்டு

goma said...

நீங்க சேட்டைக்காரன்னா
நாங்க சேட்டைக்காரி....தெரியும்ல

settaikkaran said...

//கசப்பு மருந்தில் தேன் தடவித் தந்திருக்கிறீர்...
மக்களின் ஏமாளித்தனம் என்ற வியாதி குணமாகப் பிரார்த்திப்போம்//

ரொம்ப நன்றிங்க! எல்லாம் ஒரு நம்பிக்கை தான்; பார்க்கலாம்

settaikkaran said...

//என்ன வேணும்னாலும் எழுதலாமா?????

ஹச்ந்ரிஎர்டொக்ட்ஜ்ஃப்ஹ்க்

செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த பாராட்டு//

இதை தமிழிலே எழுதியிருந்தா ரொம்ப சங்கடப்பட்டிருப்பேன். எனக்கு புகழ்ச்சியே பிடிக்காதுங்க! :-))

settaikkaran said...

//நீங்க சேட்டைக்காரன்னா
நாங்க சேட்டைக்காரி....தெரியும்ல//

அதான் உங்க வலைப்பதிவைப் பார்த்திட்டோமில்லா? :-)) உட்கார்ந்து யோசிப்போமுன்னு நீங்க தான் போடணும்.