Monday, February 8, 2010

இது அம்ம பாட்டு....!

காப்பியைச் சீப்பிக் குடிச்சிருப்போமே
காரவடையைத்தான் கடிச்சிருப்போமே
சாப்பிட்டுப் படுத்து உறங்கிக்கிட்டிருப்போம்
சாகிறவரைக்கும் புலம்பிக்கிட்டிருப்போம்

மோசமாப் போச்சுதே நாடுன்னு சொல்லி
மோட்டுவளையிலே பார்க்கிறோம் பல்லி
நாசமாப் போணுன்னு சாபங்கள் போட்டு
நம்வீட்டு வாசலில்போடுவோம் பூட்டு

அரசியல்வாதியை அனுதினம் ஏசி
அவரவர் அழுக்குமேல் பவுடரைப்பூசி
இரவும்பகலும் டிவியைப் பார்ப்போம்
இருக்கிற குப்பையில் மேலும் சேர்ப்போம்

கருப்புலே சினிமா டிக்கெட் வாங்கு
காந்தியை நினச்சு மனசுக்குள் ஏங்கு
விருப்புடனே கையூட்டுகள் கொடுத்து
வீரம்பேசுவார் வீட்டுக்குள் படுத்து

குத்தம்சொல்வதை ஒருநாள் நிறுத்து
கூனாயிருக்கிற முதுகை நிமிர்த்து
எத்தனைநாள்நீ பேசிக்கிட்டிருப்பே?
எலந்தவடையைப்போல் ஊசிக்கிட்டிருப்பே?

10 comments:

goma said...

சேட்டைக்காரன் நெஜமாலுமே பயங்கரச் சேட்டைக்காரன்......

அண்ணாமலையான் said...

பட்டய கெளப்புங்க

settaikkaran said...

//சேட்டைக்காரன் நெஜமாலுமே பயங்கரச் சேட்டைக்காரன்......//

ரொம்ப நன்றிக்கா! உங்க வலைப்பதிவைப் பார்த்தேன்! அட்டகாசம் போங்க! நம்மூருன்னாலே எல்லாமே தூள் தான் போலிருக்கு!

settaikkaran said...

//பட்டய கெளப்புங்க//

நன்றிண்ணே! சொல்லிட்டீங்கல்லே, இனி தூள் கிளப்பிருவோமில்லா?

கும்மாச்சி said...

சேட்டைக்காரன் தாத்தா பாட்டு, அடுத்தது அம்மா பாட்டு, பிறகு ஐயா பட்டு உண்டா, ஹூம் நடக்கட்டும், தல இன்னும் நிறையக் கவி எதிர் பார்க்கிறோம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அடிதூள் கலக்கிட்டீங்க

settaikkaran said...

//சேட்டைக்காரன் தாத்தா பாட்டு, அடுத்தது அம்மா பாட்டு, பிறகு ஐயா பட்டு உண்டா, ஹூம் நடக்கட்டும், தல இன்னும் நிறையக் கவி எதிர் பார்க்கிறோம்.//

அண்ணே, ஐயா பாட்டு, அண்ணன் பாட்டு, தம்பி பாட்டு, கொளுந்தியா பாட்டு எல்லாம் வந்துக்கிட்டேயிருக்கும் பாருங்க! ஒரு ரெண்டு கொயர் நோட்டு நெறய எழுதி வச்சிருக்கோமில்லா....?

settaikkaran said...

//அடிதூள் கலக்கிட்டீங்க//

ஆஹா! ரொம்ப நன்றிங்கண்ணே!

விஸ்வாமித்திரன் said...

சேட்டக்காரன் பயங்கர பாட்டுக்காரன் போல

settaikkaran said...

//சேட்டக்காரன் பயங்கர பாட்டுக்காரன் போல//

வாங்க வாங்க! வசிஷ்டர் வாயாலே பிரம்மரிஷி பட்டம் வாங்க முடியுதோ இல்லியோ, அவரோட பரமவைரியான ராஜரிஷி விஸ்வாமித்திரர் கிட்டே பாராட்டு வாங்கினது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குதுண்ணே!