Thursday, January 14, 2010

ஆர்க்குட்டுலே அமுருதா

ஆர்குட்டிலே அமுருதா அழைக்கிறா-தெனம்
ஆஷாப்பொண்ணு ஃபேஸ்புக்கிலே குழைகிறா- நான்
அவங்களிலே ஒருத்தி பின்னால் போகவா?-இல்லே
அமிஞ்சிக்கரையில் தனிமையிலே வேகவா?

நூறடிரோடுபோல் மனசாச்சு பள்ளம்-மாகி
நூடுல்ஸ்போல் வெந்துபோச்சே உள்ளம்

மாம்பலன்னா ரங்கநாதன் ஸ்ட்ரீட்டுதான்-அங்கே
மண்டே முதல் சண்டேவரை ட்ரீட்டுதான்-நம்ம
மயிலாப்பூரு தெப்பக்குளம் ஸ்டாப்புதான்-அங்கே
மாஞ்சுபோயி நின்னிருப்பான் மாப்புதான்

திர்லக்கேணி போனா உண்டு ரத்னா கஃபே-பணத்
திமிரெடுத்து நீ துண்ணே பஃபே

பிஸ்ஸாவத் தான் துண்ணுவேன்னு சொல்லுறா-தெனம்
பிக்சருக்கு அழைச்சிட்டுப்போய் கொல்லுறா-புது
செல்லுவாங்கிக் கொடுத்ததொரு குத்தமா-ரீசார்ஜ்
செய்யலேன்னா திட்டுறாளே சத்தமா

ஆரும் பண்ணாதீங்க லவ்வு தொல்லையப்பா-வெறும்
அல்டாப்பெல்லாம் காதல் இல்லையப்பா

3 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

சோக்காகீது நைனா...!

:))

settaikkaran said...

ப்ரியமுடன் வசந்த்

டாங்க்ஸ்பா! :-))

Ananya Mahadevan said...

:))