Monday, March 1, 2010

கிரிக்கெட்-தொடர்(!?!)பதிவு


வலைப்பதிவு ஆரம்பிக்கிறபோதே நிறைய பேர் சொன்னாங்க! ’கண்ணா, இதுவரைக்கும் நீ உனக்குக் கொஞ்சமாத் தெரிஞ்சதைப் பத்தி மட்டும்தான் பீலா விட்டிக்கிட்டிருந்தே! இனிமே தெரியாதததைப் பத்தியும் ரீல் ரீலாப் பீலா விடலாம்,’ன்னு! அவங்க ஆசீர்வாதம் வீண்போகுமா? நானும் ரெண்டு மாசத்துலே கானா,வெண்பா,ஜோசியமுன்னு ஒரு ரவுண்டு வந்திட்டிருக்கேன்! ஆனா பாருங்க, நம்ம பிரபாகர் இந்த ’கிரிக்கெட்’ தொடர்பதிவுக்கு அழைச்சதும் விதிமுறையிலே "உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும்,"னு ஒரு பெரிய கண்டிசன் போட்டிருந்தாரு! அதுனாலே ’எனக்குக் கிரிக்கெட் விளையாட்டைப் பத்தி ஒண்ணும் தெரியாது,’ன்னு முதல்லேயே சொல்லிடறேன்! அப்புறமும் இதை ஏன் எழுதறேண்ணா....


இரண்டாவது விதிமுறை என்னான்னா, தற்போது கிரிக்கெட் ஆடுறவங்க பெயரைத் தான் சொல்லணும்கிற அவசியமில்லை! அதுனாலே, இன்னும் இருபது வருஷம் கழிச்சுக் கிரிக்கெட் விளையாடப்போற ஆளுங்களைப் பத்தித் தான் இந்தப் பதிவுலே எழுதப்போறேன்.

1.பிடித்த கிரிக்கெட் வீரர்

பீரேந்திர தேவாங்க் - எவனாவது இளிச்சவாயன் அகப்பட்டா ஒரு நாளுலே ஆயிரம் ரன் அடிச்சிருவாரு. இவரு ஆடுற மாட்சுகளில் பவுண்டரி, சிக்ஸர் சொல்ல ரெண்டு அம்பயர் தனியா வச்சிருப்பாங்க!

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்

கொச்சின் குண்டுல்கர் - இவரு ஆடுறாரோ இல்லையோ, இவரில்லாத விளம்பரமே இருக்காது. கார்ல்-ஜீய்ஸ் கண்ணாடியிலிருந்து கருங்குரங்கு லேகியம் வரைக்கும் இவர் முகத்தை வச்சுத்தான் வியாபாரமாகும்.

3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர்

இட் லீ
- ஒரு வாட்டி எல்.பி.டபுள்யூ கொடுக்கலேன்னு பௌலிங் பண்ணுற சாக்கிலே ஸ்கொயர்-லெக் அம்பயரோட மண்டையை உடைச்சுப்புட்டாரு! ஒரு ரன் தானே நஷ்டம்?

4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்

சங்கடேஷ் பிரசாத் - இவர் சேப்பாக்கத்துலே வொய்டு பால் போட்டாரு! பந்தை செங்கல்பட்டுக்கு டிரையின் புடிச்சுப் போயி எடுத்திட்டு வந்தாங்க!

5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர்

தர்பூசண் சிங் - அண்ணன் பந்து வீசுவாரோ இல்லையோ, நாயே,பேயே,நரியேன்னு திட்டியே அவுட்டாக்கிருவாரு!

6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர்

குட்டையா புரளீதரன் - இவரு பவுலிங் பண்ணும்போது முழிக்கிற முழியிலேயே பாதி பேரு பயந்து போய் அவுட்டாகிப் போயிருவாங்க!

7. பிடித்த வலதுகை துடுப்பாட்டக்காரர்

பகாளா ஜெயவருத்தனே- இவரு செஞ்சுரி அடிச்சா அவர் டீம் கண்டிப்பாத் தோத்துரும்; அப்படியொரு ராசி!

8. பிடிக்காத வலது கை துடுப்பாட்டக்காரர்

பக்கி வாண்டிங்-கொச்சின் குண்டுல்கரோட ரிக்கார்டையெல்லாம் இவர் தான் உடைக்கப்போறாரு பாருங்களேன்

9. பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர்

ஜவ்ரவ் சிங்குலி- மத்தவங்கெல்லாம் பட்டையைக் கழட்டுவாங்க; இவர் சட்டையைக் கழட்டுவாரு!

10. பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர்

நரேஷ் நயினா - நம்பினா கழுத்தறுக்கிறதுலே இவரை "பீட்" பண்ண ஆளு இல்லை.

11. பிடித்த களத்தடுப்பாளர்

அஹமது உஷாருதீன் - இவர் விழுந்து புரண்டு பள்ளம் பண்ணாத மைதானமே கிடையாது.

12. பிடிக்காத களத்தடுப்பாளர்

நவ்சோத்து சிங் பித்து- இவரு ஸ்லிப்பிலே நின்னுக்கிட்டிருந்தாலும் தைரியமா நாலு ரன் ஓடியே எடுத்திரலாம்.

13. பிடித்த ஆல்ரவுண்டர்

ஜோக் கூலீஸ் - இவர் ஒரு தடவை செஞ்சுரியடிச்சா நூறு செஞ்சுரி அடிச்சா மாதிரி!

14. பிடிக்காத ஆல்ரவுண்டர்

பகீர் அப்ரிடி- பிடிச்சிருக்கோ, பிடிக்கலியோ கையிலே எது கிடைச்சாலும் கடிச்சுப்புடுவாரு!

15. பிடித்த நடுவர்

கில்லி கௌடங்- யாராவது பவுண்டரியடிச்சா இவரு பரதநாட்டியம் ஆடுவாரு! சிக்ஸர் அடிச்சா பாங்க்ரா ஆடுவாரு!

16. பிடிக்காத நடுவர்

ஸ்டவ் மக்கண்ணர் - இவரு எல்.பி.டபுள்யூவெல்லாம் கொடுக்க மாட்டாருன்னு அடுத்த பந்தை வீச பவுலர் போகிறபோதுதான் இவர் ரொம்ப நிதானமா ’விண்ணைத்தாண்டி வருவாயா?’ படம் பார்த்திட்டு வந்தவர் மாதிரி சுறுசுறுப்பா ’அவுட்’ கொடுப்பாரு!

17. பிடித்த நேர்முக வர்ணனையாளர்

டோனி கிறுக்கு- இந்தாளு வர்ணனை பண்ணுறாரா, வயித்துவலியிலே கூவுறாரான்னு யாராலேயும் கண்டுபிடிக்க முடியாது.

18. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்

ரவி பிளாஸ்திரி- யாராவது 99-லே ஆடிட்டிருக்கும்போது இவரு வர்ணனை சொல்ல ஆரம்பிச்சாருன்னா, அவங்க சதமடிக்காமலேயே அவுட் ஆயிருவாங்க!

19. பிடித்த அணி

"Guns of Kannammapettai-கன்ஸ் ஆஃப் கண்ணம்மாபேட்டை" - இருபது வருசம் கழிச்சு யாரு டெஸ்ட் மேட்ச், ஒன்-டே மேட்ச் பார்க்கப்போறாங்க! லோக்கல் டீமுங்க T20 விளையாடும், வெளிநாட்டு வீரர்களோட

20. பிடிக்காத அணி
"Buns of Parangimalai-பன்ஸ் ஆஃப் பரங்கிமலை" - இவங்களுக்கு 20 ஓவரெல்லாம் வேண்டாம். இருபது பந்துலேயே "ஆல் அவுட்" ஆயிருவாங்க!

21. விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கு இடையேயான போட்டிகள்

"கன்ஸ் ஆஃப் கண்ணம்மாபேட்டை Vs Tondiarpet Tigers தண்டையார்பேட்டை டைகர்ஸ்"

22. பிடிக்காத அணிகளுக்கான போட்டி
"பன்ஸ் ஆஃப் பரங்கிமலை" vs "Chrompet Crows -குரோம்பேட்டை க்ரோஸ்"

23. பிடித்த அணித் தலைவர்

யுகேந்திரசிங் கோணி - இவரு எப்போ முடிவளர்ப்பாரு, எப்போ வெட்டுவாருன்னு யாருக்கும் தெரியாது; ஆனா வெட்ட வேண்டிய நேரத்துலே சரியா வெட்டிருவாரு

24. பிடிக்காத அணித் தலைவர்
ஹூநோஸ் முகமது- இவரு எத்தனை தடவை ராஜினாமா பண்ணினாரு, எத்தனை தடவை இவரை நீக்கினாங்கன்னு இவருக்கே தெரியாது.

25. பிடித்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி
கொச்சினும் ஜவ்வுரவும்

26. பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி
கில்மா பட்டும் பகீர் கப்கடியும்

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்
பக்கி வாண்டிங்

28. உங்கள் பார்வையில் சிறந்த ஒருநாள் போட்டி வீரர்
கொச்சின் குண்டுல்கர்

29. பிடித்த போட்டி வகை

பத்துக்குப் பத்து

30. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்

அணில் குவாஸ்கர்- இவரு தான் நூறு ஓவர் விளையாடி இருபத்தி அஞ்சு ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் சாதனை பண்ணினாரு!

சரி, இப்போ மூன்றாவது விதிமுறைப்படி யாரையாவது தொடர அழைக்க வேண்டுமே? யாரு வர்றீங்க ஆட்டத்துக்கு?

ஹலோ, ஏன் தலை தெறிக்க ஓடறீங்க? நில்லுங்க! அட் லீஸ்ட் ரெண்டு பேராவது நில்லுங்க! ப்ளீஸ்!

40 comments:

Unknown said...

ஒவ்வொரு பதிலும் குறும்பு பளிச்சிடுகிறது.

நானும் ஒவ்வொரு கேள்வியைப் படிக்கும்போதும் இந்தக் கேள்விக்கான பதிலை கமெண்ட்ல எழுதி ரசித்தேன் அப்பிடின்னு போடாலாம்னு நினைச்சேன். கடைசியில இப்பிடிப் பொதுவா போட வச்சிட்டீங்க.. :))

Ananya Mahadevan said...

கிரிக்கெட் தெரியாது தெரியாதுன்னு சொல்லிட்டு இந்த ஆட்டம் ஆடி இருக்கே! சூப்பர்!

அகல்விளக்கு said...

ஹெக்ஹே....

செம கலக்கல் தல....


சிரிச்சு ரசித்தேன்...

ரசித்து சிரித்தேன்...

:-)

மங்குனி அமைச்சர் said...

நாம்ம சோட்டைகாரன் ரொம்ப கிரிவாளிப்பா

Starjan (ஸ்டார்ஜன்) said...

சேட்டை அசத்திட்டீங்க. நன்று நன்று

Chitra said...

யுகேந்திரசிங் கோணி - இவரு எப்போ முடிவளர்ப்பாரு, எப்போ வெட்டுவாருன்னு யாருக்கும் தெரியாது; ஆனா வெட்ட வேண்டிய நேரத்துலே சரியா வெட்டிருவாரு

........... எல்லா பதிலிலும் உள்ள சேட்டையை ரசித்தேன்.

R.Gopi said...

யப்பா....

20/20 போட்டியில மொத மொத 200 அடிச்சா ஆளுய்யா நீயி......

பெரிய டெர்ரர் பார்ட்டிதேன்....

பார்த்து சூதானமா நடந்துக்கணும் போல இருக்கே..... எம்புட்டு டெர்ரரு...???!!!!

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

சைவகொத்துப்பரோட்டா said...

நேத்து காணாம போன சேட்டை இன்னைக்கு வந்தாச்சு, கலக்கல் அண்ணாச்சி :))

எல் கே said...

mudiyala

பிரபாகர் said...

எப்படி நண்பா, எதிர்பாத்தமாதிரியே கலக்கிபுட்டீங்க! அருமையான கலாய்த்தல். சேட்டையின் சேட்டை அருமை...

பிரபாகர்.

சிநேகிதன் அக்பர் said...

சரியான நக்கல். கலக்கல் போங்க.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பர்...

Rekha raghavan said...

கிரிக்கெட் வீரர்களின் பேரை மாத்தி யோசிப்பதிலும் செமயா கலாய்க்கறீங்க!

ரேகா ராகவன்.

க ரா said...

ஹா. ஹா. ஹா.

Paleo God said...

இன்னா வேண்ணாலும் எளுதலாம்//
சரிதான்..:)

Bavan said...

ஐயா சாமி முடியல இப்பவே கண்ணக்கட்டுதே...அவ்வ்வ்

Raghu said...

//சங்கடேஷ் பிரசாத் - இவர் சேப்பாக்கத்துலே வொய்டு பால் போட்டாரு! பந்தை செங்கல்பட்டுக்கு டிரையின் புடிச்சுப் போயி எடுத்திட்டு வந்தாங்க!//

ஹாஹ்ஹா, சூப்ப‌ர‌ப்பு:))

நாகராஜன் said...

சேட்டை... பட்டைய கிளப்பிட்டீங்க போங்க. ஒவ்வொரு பந்தையும் நாலு ஓட்டங்களுக்கும், ஆறு ஓட்டங்களுக்கும் அனாயசியமா அடிச்சு நொறுக்கிட்டீங்க போங்க. கலக்கலோ கலக்கல்... எப்படிஈஈஈஈ... உன்னால மட்டும் இப்படி எல்லாம் முடியுது...

settaikkaran said...

//ஒவ்வொரு பதிலும் குறும்பு பளிச்சிடுகிறது.//

நன்றி முகிலன் அவர்களே!

//நானும் ஒவ்வொரு கேள்வியைப் படிக்கும்போதும் இந்தக் கேள்விக்கான பதிலை கமெண்ட்ல எழுதி ரசித்தேன் அப்பிடின்னு போடாலாம்னு நினைச்சேன். கடைசியில இப்பிடிப் பொதுவா போட வச்சிட்டீங்க.. :))//

அடுத்த தடவை இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்களேன்! அனைவரும் ரசிப்பார்களே! :-))

மீண்டும் நன்றி!

settaikkaran said...

//கிரிக்கெட் தெரியாது தெரியாதுன்னு சொல்லிட்டு இந்த ஆட்டம் ஆடி இருக்கே! சூப்பர்!//

இதுக்காக சினேகிதர்கள் கிட்டே ஏதேதோ பொய் சொல்லி, ஒரு லிஸ்ட் தயார் பண்ணி அப்புறமா எழுதினேன். அவங்க கிட்டே இன்னும் காட்டலே; உயிர்மேலே ஆசையிருக்கே? :-)

நன்றிங்க!

settaikkaran said...

//ஹெக்ஹே....

செம கலக்கல் தல....

சிரிச்சு ரசித்தேன்...

ரசித்து சிரித்தேன்...

:-)//

மிக்க நன்றி அகல்விளக்கு அவர்களே! உங்களது ஒவ்வொரு வருகையும் கருத்தும் எனக்கு உற்சாகமளிக்கிறது.

settaikkaran said...

//நாம்ம சோட்டைகாரன் ரொம்ப கிரிவாளிப்பா//

ஹி..ஹி! ஆனாலும் உங்க கிட்டேயிருந்து இன்னும் நிறைய கத்துக்கணும்! மங்குனி அமைச்சர் மனசு வச்சா மன்னர்கள் மண்ணைக் கவ்வ வேண்டியது தான், அவ்வளவு நகைச்சுவை உங்களிடம் இருக்கு! :-))

மிக்க நன்றி!

settaikkaran said...

//சேட்டை அசத்திட்டீங்க. நன்று நன்று//

மிக்க நன்றி ஸ்டார்ஜன் அண்ணே! எல்லாம் உங்க அன்பும் ஆதரவும் தான்! :-)

settaikkaran said...

//........... எல்லா பதிலிலும் உள்ள சேட்டையை ரசித்தேன்.//

உண்மையில், உங்க பதிவிலே நீங்களும் கிரிக்கெட் பற்றி அவ்வளவாகத் தெரியாது என்று குறிப்பிட்டிருந்தது தான் எனக்கும் தைரியம் அளித்தது. மிக்க நன்றி!

settaikkaran said...

//20/20 போட்டியில மொத மொத 200 அடிச்சா ஆளுய்யா நீயி......

பெரிய டெர்ரர் பார்ட்டிதேன்....

பார்த்து சூதானமா நடந்துக்கணும் போல இருக்கே..... எம்புட்டு டெர்ரரு...???!!!!//

வசிஷ்டர் வாயாலே பிரம்மரிஷி பட்டம் வாங்குறது இது தானா? அசல் டெரர் நீங்க தான் அண்ணே! உங்க வலைப்பக்கத்தை ஒரு நாள் முழுக்க நிதானமாப் படிக்கணும். மிக்க நன்றி!

settaikkaran said...

//நேத்து காணாம போன சேட்டை இன்னைக்கு வந்தாச்சு, கலக்கல் அண்ணாச்சி :))//

ஹி..ஹி! நமக்கு இந்த யூனிஃபாரம் நல்லாப் பொருந்துதண்ணே! மிக்க நன்றி!!

settaikkaran said...

//mudiyala//

ஒருவாசகமுன்னாலும் திருவாசகம்! :-))
நன்றிங்க!!

settaikkaran said...

//எப்படி நண்பா, எதிர்பாத்தமாதிரியே கலக்கிபுட்டீங்க! அருமையான கலாய்த்தல். சேட்டையின் சேட்டை அருமை...//

கிரிக்கெட்டைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று சொன்ன பிறகும் என்னை அழைத்து எழுத வைத்தவர்கள் நீங்கள் தானே? உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்! ;-))

settaikkaran said...

//சரியான நக்கல். கலக்கல் போங்க.//

மிக்க நன்றி அக்பர் அவர்களே!

settaikkaran said...

//சூப்பர்...//

பட்டா பட்டி அண்ணே! வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி!!

settaikkaran said...

//கிரிக்கெட் வீரர்களின் பேரை மாத்தி யோசிப்பதிலும் செமயா கலாய்க்கறீங்க! //

ரொம்ப நன்றி ரேகா ராகவன் அவர்களே! ஏதோ சேட்டைக்காரனோட பின்நவீனத்துவம் இதுவா இருக்கட்டுமே! :-))

settaikkaran said...

//ஹா. ஹா. ஹா.//

மூன்றெழுத்திலே உங்களது ’மூடை’த் தெரிவித்ததற்கு மிக்க நன்றி க.இராமசாமி அவர்களே! :-))

settaikkaran said...

//இன்னா வேண்ணாலும் எளுதலாம்//
சரிதான்..:)//

ஹி..ஹி! எழுதிட்டீங்கல்லே? மிக்க நன்றிங்க!! :-)

settaikkaran said...

//ஐயா சாமி முடியல இப்பவே கண்ணக்கட்டுதே...அவ்வ்வ்//

ஹலோ! சிங்கமுத்துவா? இங்கே ஒருத்தரு அவ்வ்வுங்கிறாரு, என்னான்னு கேளுங்க! :-))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

settaikkaran said...

//ஹாஹ்ஹா, சூப்ப‌ர‌ப்பு:))//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//பட்டைய கிளப்பிட்டீங்க போங்க. ஒவ்வொரு பந்தையும் நாலு ஓட்டங்களுக்கும், ஆறு ஓட்டங்களுக்கும் அனாயசியமா அடிச்சு நொறுக்கிட்டீங்க போங்க.//

அப்படீன்னா சானட்டோரியம் சாமிலியன்ஸ் அணியிலே சேர்த்துக்குவாங்கன்னு சொல்லுங்க! :-))

//கலக்கலோ கலக்கல்... எப்படிஈஈஈஈ... உன்னால மட்டும் இப்படி எல்லாம் முடியுது...//

எல்லாம் யானைப்பால் தான்; அதாவது ஞானப்பால் தான்! :-))

மிக்க நன்றி ராசுக்குட்டி அவர்களே!!

பனித்துளி சங்கர் said...

கலக்கல் போங்க . எப்படி நண்பரே க்ரூப்பா யோசிப்பீங்களா இல்லை வேறு ஏதாவது இதில் உள் குத்து
எதுவும் இருக்கா ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Excuse me......சார்..
இங்க சேட்டைனு ஒருத்தர் இருந்தாரு..

என்னமோ , நல்லவராயிட்டாருனு கேள்விப்பட்டு, அப்படியே
பேண்ட் கூட போடாம, ஓடி வந்துட்டேன்..

அவரைப் பார்த்தா , கொஞ்சம் சொல்ல முடியுமா?..

( சேட்டை.. எந்த முகமூடி வேணாப் போட்டுக்கோங்க..
ஆனா , கவிதையினு ஆரம்பிச்சிங்க.. அப்புறம் ஒரு விருது ரெடி பண்ண வேண்டி வரும் என்பதை
சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..)


சும்மா டமாசுக்கு சார்..
( அப்பாடா.. சொல்ல வேண்டியத சொல்லிட்டு டமாசுனு முடிச்சாச்சு..நீ யாரு பட்டாபட்டி.?.)

Mohan said...

வாழ்க்கையில முதல் முறைய blog ல கமெண்ட் போடுறேன்...கடந்த ஒரு வருசமா blog படிக்கிறேன்..கிட்ட தட்ட ஒரு 40 பதிவர்களோட பதிவுகள தினமும் படிக்கிறேன்...but இவ்ளோ சத்தமா சந்தோசமா சிரிச்சி ரொம்ப நாள் ஆகுது...thank u so much...

உங்களால இன்னைக்கு ஆபீஸ் ல நான் ஆப்பு வாங்கினேன், பின்ன இவ்ளோ சத்தமா ஆபீஸ் ல சிரிச்சா?

இதுல என்ன கொடுமைன என் டேமஜெர் என்ன கூப்பிட்டு கேக்கும் போதும் நன் பயங்கரமா சிரிச்சேன்...அவரும் தமிழ் தான், பின்ன அவரையும் கூப்பிட்டு காண்பித்தேன்...அவரால முதல் ௧௦ வரி கூட படிக்க முடியல, சிரிச்சிட்டே அவர் ரூமுக்கு ஓடி போயிட்டாரு...

இன்னும் நிறைய எங்கள சிரிக்க வைங்க..because என்ன மாதிரி அயல் நாட்டில் வேலை செய்பவர்களுக்கு இதுதான் அரு மருந்து..

acutually என் first கமெண்ட் Nanjil Express க்கு தான் குடுக்கனும்னு நெனச்சேன், but நீங்க என்ன ரொம்ப சிரிக்க வச்சிட்டேங்க..

thank you very much from me and my damager (manager)

Best Regards,
Mohan

settaikkaran said...

//இன்னும் நிறைய எங்கள சிரிக்க வைங்க..because என்ன மாதிரி அயல் நாட்டில் வேலை செய்பவர்களுக்கு இதுதான் அரு மருந்து..//

மோகன் அவர்களே, இவ்வளவு பொறுமையாக, இவ்வளவு நீளமாக, இவ்வளவு உற்சாகமூட்டும் வார்த்தைகளைக் கோர்த்து பின்னூட்டம் எழுதியிருப்பதற்கே நான் உங்களுக்கு சிரம்தாழ்த்தி, கரம்கூப்பி நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். வார்த்தைகளால் நன்றி தெரிவிக்க முடியாது உங்களுக்கு! அதனால், உங்களுக்கு அருமருந்தாக இருப்பதாகக் கூறுகிற எனது பதிவுகளைப் போல தொடர்ந்து எழுத முயல்வேன் என்ற உறுதியை மட்டும் அளிக்கிறேன்.