Monday, October 24, 2011

பேல்பூரி-ஸ்டால் எண்: 231011


குட்டிக்கதை

பேலூர் காளிகோவிலில் நவராத்திரி கொண்டாட்டங்கள் விமரிசையாக நடந்து கொண்டிருந்தனவாம். விழாக்குழுவினருக்கு ஒரே ஒரு கவலை; ஒவ்வொரு நாளும் காளிக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிப்பதற்காக தயாரிக்கப்பட்ட இனிப்புகளை எறும்பு மொய்த்ததால் வீணாகப் போய்க்கொண்டிருந்தனவாம். இதைக் கேள்விப்பட்ட ராமகிருஷ்ண பரமஹம்சர் "கோவில் வாசலில் ஒரு பிடி சர்க்கரையைத் தூவுங்கள்,’ என்று அறிவுரை கூறினாராம். அதன்படி செய்ததும், சாரி சாரியாக வந்த எறும்புகள் வாசலில் தூவியிருந்த சர்க்கரையை மொய்த்து விட்டு, வந்தவழியே திரும்பிச் சென்றனவாம். அன்றுமுதல் பக்தர்களுக்கு எறும்பு மொய்க்காத இனிப்புகள் கிடைத்தனவாம். பரமஹம்சரின் சமயோஜிதத்தைப் பாராட்டிய விழாக்குழுவினர் ’எப்படி எறும்புகள் வாசலில் இருந்த சர்க்கரையை மட்டும் தின்றுவிட்டுத் திரும்பிச் சென்றன?’ என்று கேட்டார்களாம். அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பதில்:

"எறும்புகள் மட்டுமல்ல; மனிதர்களும் அப்படித்தான்! உயர்ந்த லட்சியங்களை நோக்கிப் புறப்படுவார்கள். ஆனால், இடையில் கிடைக்கிற அற்ப சந்தோஷங்களில் மகிழ்ந்து இது தான் லட்சியம் என்று போலியாக மகிழ்வடைந்து வாழ்வின் பொருளை மலிவாக்கிக் கொள்வார்கள்!"

பேரின்பம், சிற்றின்பம் குறித்து இதை விட சிறப்பாகக் கூறிய குட்டிக்கதையை நான் கேள்விப்பட்டதில்லை.

லூஸ் டாக்கிங்

மத்திய அரசில் நம்பர் 2 யார் என்பதில் காங்கிரஸில் இப்போது சண்டை-அத்வானி!

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும். நம்பர் 2 எப்பவுமே மன்மோகன் சிங்தானாக்கும்!

ராசா, தயாநிதிக்கு பதில் மத்திய அமைச்சரவையில் யாரையும் சேர்க்க திமுக விரும்பவில்லை!


ஆமாம்! ரகசியமா சத்தியமூர்த்தி பவன்-லே விவாதிச்சா அடுத்த நாள் எப்படியும் போட்டோவோட பகீரங்கமாகத் தானே போகுது?

அதிமுக, திமுக கூட்டணி அல்லாத புதிய அணி தமிழகத்தில் உருவாக வேண்டும்: கிருஷ்ணசாமி-

தப்பித்தவறி இதை கேப்டன் காதுலே போடாம இருக்கணும். அவரே பாவம் செம கடுப்புலே இருப்பாரு!

வாக்காளர்களுக்கு கொடுத்த லஞ்சத்தை திருப்பிக் கேட்ட வேட்பாளர்- மக்கள் அதிர்ச்சி-

வாக்காளர்கள் Right to recall சட்டம் கேட்குறா மாதிரி, வேட்பாளர்கள் Right to recover சட்டமும் கேட்பாங்களோ?

ஒரு ஓட்டுக் கூட வாங்க முடியாத வேட்பாளர்!

அடப்பாவமே, அவ்வளவு நல்லவரா?

ஐஸ்வர்யா ராயாக ஆசை: அசின்

தூக்குலே போடுறதுக்கு நீங்க என்ன மைசூர் பாகா, தேங்காய் பர்பியா?

மோனிகா லெவின்ஸ்கியை சமாளிப்பது எப்படி?-ஜாப்ஸிடம் அட்வைஸ் கேட்ட கிளிண்டன்! 

அதை விடுங்கண்ணே! ஹிலாரியை கிளிண்டன் சமாளித்தது எப்படி-ன்னு பாகிஸ்தான்லே கேட்குறாங்களாம்!

அசத்தும் பதிவர்கள்:

நண்பர் கணேஷ் அவர்களின் ’மின்னல்வரிகள்’வலைப்பூ படுசுவாரசியம். சினிமா,இலக்கியம், செய்திகள் என்று     கல்யாணச் சாப்பாடு மாதிரி அண்ணாத்தே கலக்கிட்டிருக்காரு! குறுகிய     காலத்திலேயே அவரைப் பல பதிவர்கள் அரவணைத்துக் கொண்டிருப்பது     அவர்போன்ற புதிய பதிவர்களுக்கு உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது.     பதிவுக்காக அவர் மேற்கொள்ளுகிற முயற்சிகளை     இடுகைகளை வாசிக்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.


கு.சீனுவாசன் அவர்களின் "சீனுவாசன் பக்கங்கள்"வலைப்பூவுக்குள்     போனால், அம்பா ஸ்கைவாக் மால் போனமாதிரி ஒரு     பிரமிப்பு     ஏற்படுகிறதுங்கோ! மனிதர் கவிதைகள், குறுஞ்செய்திகள்,     நகைச்சுவை     என்று பொளந்து கட்டுகிறார். இருந்தாலும் என்னுடைய     ஃபேவரிட் அவரது குழந்தைப்பாடல்கள் மற்றும் மெட்டுப்பாடல்கள்.

காணக்கண் கோடி வேண்டும்



தீபிகா பலிக்கல் என்ற இளம் வீராங்கனை ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாவார். விளையாட்டுத்துறையில் உலகளவில் பலரின் உள்ளங்கவர்ந்த சானியா மிர்சா, சாயினா நெஹவால் போலவே மிகவும் அழகான, மன்னிக்கவும், மிகவும் திறமையானவர் என்பதால் அவர் மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாயெல்லாம் பல்லாக வாழ்த்துகிறேன்.

இளம் வீராங்கனைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் மேற்படி படம் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுவீர்களாக!

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

சகபதிவர்கள், வாசகர்கள் மற்றும் அவரது உற்றார் உறவினர் அனைவருக்கும் எனது இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

(மறக்காமல் தீபாவளியன்று லேகியம் சாப்பிடவும்; தவறினால் பண்டிகை என்றும் பார்க்காமல் ஒரு இடுகை எழுதினாலும் எழுதுவேன்)

51 comments:

SURYAJEEVA said...

//(மறக்காமல் தீபாவளியன்று லேகியம் சாப்பிடவும்; தவறினால் பண்டிகை என்றும் பார்க்காமல் ஒரு இடுகை எழுதினாலும் எழுதுவேன்)//

லேகியம் சாப்பிட மறந்துடுவேன், உங்கள் இடுகைக்காகவே

வெங்கட் நாகராஜ் said...

பேல்பூரி கலக்கல்...

உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சேட்டை....

MANO நாஞ்சில் மனோ said...

என் மிட்டாய் [[இனிய]] தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

சென்னை பித்தன் said...

குட்டிக்கதை அருமை.

பால கணேஷ் said...

-ராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக் கதை வெகு பிரமாதம்!

-இன்ப அதிர்ச்சி என்று என் மதிப்புக்குரிய கே.பாக்யராஜ் அவர்கள் சொல்வது அனுபவத்தில் எப்படியிருக்கும் எனறு இன்று தாங்கள் என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைப் படித்தபோதுதான் முழுமையாக உணர்ந்தேன். மிக மிக மிக நன்றியண்ணா.

-கு.சீனுவாசனின் பக்கங்களுக்கு நானும் விசிட் அடித்து ரசித்ததுண்டு, கமெண்ட் போட்டதுண்டு. நல்ல அறிமுகம்.

-தீபிகா... எனக்கும் பிடிக்கும்!

-உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவானந்தம் said...

இதற்குத்தான் நிறைய புத்தங்கங்கள் படிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். காரணம், நல்ல சிந்தனைகள் ஏதோ ஒரு புத்தகங்கள் மூலம் நம்மை வந்தடையும்

ராமகிருஷ்ணரின் அந்த கதையை நான் படிக்காவிட்டாலும் சேட்டைக்காரன் மூலம் அதை படிக்க முடிந்ததில் மகிழ்ச்சி. அருமையான தத்துவம்.

Rathnavel Natarajan said...

அருமை.
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கல் சேட்டை, இளம் வீராங்கனைகளை நன்றாகவே ஊக்குவித்துவிட்டோம்.... ஹி...ஹி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தேவைப்பட்டால் எங்களில் யாரையாவது தூக்கில் போட்டுக் கொள்ளுங்கள்- கிரண் பேடி

தூக்குலே போடுறதுக்கு நீங்க என்ன மைசூர் பாகா, தேங்காய் பர்பியா?////

சேட்டை ட்ரேட்மார்க்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஐஸ்வர்யா ராயாக ஆசை: அசின்

அதுசரிதான், அபிஷேக் பச்சன் ரெடியா?/////

பாவம் ஐசு.......

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ........

கோகுல் said...

ஒரு ஒட்டுக்கூட வாங்கலையா?அடடே!
பல்சுவை பேல் பூரி~கலக்கல்!
தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்!

Unknown said...

மாப்ள கலக்கல் பதிவு...அதுவும் கடைசீல லேகியம் மேட்டரு டாப்புய்யா!

Unknown said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கதை அருமை.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Chitra said...

Super!!!!!! :-)

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran said...

சேட்டை... பேல்பூரி ஸ்டாலை மறுபடியும் திறந்ததற்கு வாழ்த்துக்கள்... வாராவாரம் தவறாமல் திறக்கவும்...

ஒற்றை வரி செய்தி விமர்சனங்கள் செம நக்கல்...

நிரூபன் said...

வணக்கம் சகோ,
நலமா?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய இன்பத் தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ஹ ர ணி said...

முதன் முறையாக வந்தேன். சேட்டைக்காரன் என்று இருந்தாலும் ரேஞ்சு எல்லாம் (பதிவுகள்) சித்தன் நிலைக்கு இருக்கின்றன. இராமகிருஷ்ண பரமஉறம்சர் கதை அருமை.

நிரூபன் said...

குட்டிக் கதை...அசத்தலான தத்துவத்தைச் சொல்லி நிற்கிறது.
எல்லோருமே பெரிய இலட்சியத்தை மனதில் வைத்திருந்தாலும், அந்த லட்சியத்தை அடைவோர் சிலரே...

ஏனைய செய்திகளுக்கான சேட்டையின் ரகளைகள் அசத்தல்.

ரசித்தேன்,

G.M Balasubramaniam said...

அன்பின் சேட்டை, இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.உங்கள் எடக்கு மடக்கு பதிவுகள் ரசிக்கும்படியிருந்தன.

Unknown said...

அருமையான படைப்பு.
என் இனிய
அன்பின் நண்பனுக்கு .
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள் .
அன்பின் .
"யானைக்குட்டி "
ஞானேந்திரன்

Unknown said...

அருமையான படைப்பு.
என் இனிய
அன்பின் நண்பனுக்கு .
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள் .
அன்பின் .
"யானைக்குட்டி "
ஞானேந்திரன்

முத்தரசு said...

பல்சுவை விருந்து

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Unknown said...

தல தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

பட்டாசு விலையை பார்த்தாலே லேகியம் சாப்பிட்ட மாதிரிதான் இருக்கு
நீங்க சேட்டையை ஆரம்பிங்க

சத்ரியன் said...

சேட்டையண்ணெ!

பேல் பூரியில

தீபிகா பியாரி-ய (எனக்கு)அறிமுகப் படுத்தினதுக்கு நன்றிண்ணே.

உங்களுக்கும் ”லேகியா” தீபாவளி வாழ்த்துக்கள்-ணே!

சார்வாகன் said...

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

சி.பி.செந்தில்குமார் said...

>>மறக்காமல் தீபாவளியன்று லேகியம் சாப்பிடவும்; தவறினால் பண்டிகை என்றும் பார்க்காமல் ஒரு இடுகை எழுதினாலும் எழுதுவேன்)

hi hi hi

காணக்கண் கோடி வேண்டும் ஃபோட்டோ டாப்!!!

Sankar Gurusamy said...

//ஹிலாரியை கிளிண்டன் சமாளித்தது எப்படி-ன்னு பாகிஸ்தான்லே கேட்குறாங்களாம்! //

நல்ல பஞ்ச்...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

http://anubhudhi.blogspot.com/

காந்தி பனங்கூர் said...

தீபிகா அழகா இருக்காங்க நண்பா.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சேலம் தேவா said...

தீபாவளி நல்வாழ்த்துகள்..!!

rajamelaiyur said...

//
"எறும்புகள் மட்டுமல்ல; மனிதர்களும் அப்படித்தான்! உயர்ந்த லட்சியங்களை நோக்கிப் புறப்படுவார்கள். ஆனால், இடையில் கிடைக்கிற அற்ப சந்தோஷங்களில் மகிழ்ந்து இது தான் லட்சியம் என்று போலியாக மகிழ்வடைந்து வாழ்வின் பொருளை மலிவாக்கிக் கொள்வார்கள்!"
//
ரொம்ப சரி

சக்தி கல்வி மையம் said...

Nice.,

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

Unknown said...

எதை எழுதினாலும் சேட்டைக்கு நிகர்
சேட்டைதான்!
அனைத்தும் தீபாவளி இனிப்புகள்!

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

புலவர் சா இராமாநுசம்

வெளங்காதவன்™ said...

//இளம் வீராங்கனைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் மேற்படி படம் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுவீர்களாக!///

புரிஞ்சுது!
தீபாவளி வாத்துக்கள்!

ரிஷபன் said...

தீபாவளி நல்வாழ்த்துகள்.
கணேஷ் மின்னல் வரிகள் அறிமுகத்திற்கு நன்றி

Prabu Krishna said...

//இளம் வீராங்கனைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் மேற்படி படம் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுவீர்களாக!//

என்ன ஒரு நோக்கம். சரியான சேட்டையா நீர்.

Avargal Unmaigal said...

இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

middleclassmadhavi said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

கலக்கல் பேல்பூரி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

லேகியம் இப்பவே சாப்பிட்டுட்டேன்..

கே. பி. ஜனா... said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

RVS said...

பேல்பூரி பிடிக்காதவங்களுக்குக்கூட உங்களோடது பிடிச்சுப் போய்டுங்க தலைவரே! அசத்தல்....

இன்னும் ஒரு ப்ளேட் என்னிக்கி கிடைக்கும். :-)

ஸ்ரீராம். said...

தீபாவளி நல்வாழ்த்துகள் சேட்டை....
அதீதத்தில் உங்கள கதைக்கு கமெண்ட் போட்டேன். என்ன ஆனது என்றே தெரியவில்லை!!

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!நகைச்சுவையில் சேட்டைக்காரனாகவும், ஒரே இடத்தில் எல்லா செய்திகளையும் தரும் வேட்டைக்காரனாகவும் விளங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!

சீனுவாசன்.கு said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

மாதேவி said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

பேல்பூரி பலே பலே.

settaikkaran said...

//suryajeeva said...

லேகியம் சாப்பிட மறந்துடுவேன், உங்கள் இடுகைக்காகவே//

நான் எஸ் ஆயிட்டேனே! :-))
மிக்க நன்றி நண்பரே!

//வெங்கட் நாகராஜ் said...

பேல்பூரி கலக்கல்...உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சேட்டை....//

மிக்க நன்றி வெங்கட்ஜீ! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

//MANO நாஞ்சில் மனோ said...

என் மிட்டாய் [[இனிய]] தீபாவளி நல்வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றி அண்ணாச்சி! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

//சென்னை பித்தன் said...

குட்டிக்கதை அருமை.//

மிக்க நன்றி ஐயா!

//கணேஷ் said...

-ராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக் கதை வெகு பிரமாதம்!//

மகிழ்ச்சி கணேஷ்! :-)

//-இன்ப அதிர்ச்சி என்று என் மதிப்புக்குரிய கே.பாக்யராஜ் அவர்கள் சொல்வது அனுபவத்தில் எப்படியிருக்கும் எனறு இன்று தாங்கள் என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைப் படித்தபோதுதான் முழுமையாக உணர்ந்தேன். மிக மிக மிக நன்றியண்ணா.//

எப்போதோ செய்திருக்க வேண்டியது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! :-)

//-கு.சீனுவாசனின் பக்கங்களுக்கு நானும் விசிட் அடித்து ரசித்ததுண்டு, கமெண்ட் போட்டதுண்டு. நல்ல அறிமுகம்.//

யெஸ்! தூள் கிளப்புறாரு!

//தீபிகா... எனக்கும் பிடிக்கும்!//

ஓ, தெரியுமே! :-)

//-உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

மிக்க நன்றி கணேஷ்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! :-)

//சிவானந்தம் said...

இதற்குத்தான் நிறைய புத்தங்கங்கள் படிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். காரணம், நல்ல சிந்தனைகள் ஏதோ ஒரு புத்தகங்கள் மூலம் நம்மை வந்தடையும் ராமகிருஷ்ணரின் அந்த கதையை நான் படிக்காவிட்டாலும் சேட்டைக்காரன் மூலம் அதை படிக்க முடிந்ததில் மகிழ்ச்சி. அருமையான தத்துவம்.//

இந்தக் குட்டிக்கதையை நான் புத்தகத்தில் வாசிக்கவில்லை. பிரபல மேடைப்பேச்சாளர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் ஒரு சொற்பொழிவின் போது சொன்னதையே இங்கு அளித்திருக்கிறேன். எனக்கும் அதிகம் வாசிப்பனுபவம் இல்லை. மிக்க நன்றி! :-)

//Rathnavel said...

அருமை. மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கல் சேட்டை, இளம் வீராங்கனைகளை நன்றாகவே ஊக்குவித்துவிட்டோம்.... ஹி...ஹி....!//

இப்போத்தான் ஆரம்பிச்சிருக்கோம். போகப் போகத் தொடருவோம் பாருங்க! :-)

//சேட்டை ட்ரேட்மார்க்.....!//

ஹிஹி! நன்றி பானா ராவன்னா! :-)

//பாவம் ஐசு.......//

ஆமாம். ஆனா அபிஷேக் மாட்டுவாரா என்ன? #டவுட்டு
மிக்க நன்றி பானா ராவன்னா! :-)

//அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........//

உங்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//கோகுல் said...

ஒரு ஒட்டுக்கூட வாங்கலையா?அடடே!//

அதான் ஆச்சரியமா இருக்கு! அவர் ஓட்டே கூட கிடைக்கலியாமே? :-))

//பல்சுவை பேல் பூரி~கலக்கல்!தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்!//

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! மிக்க நன்றி நண்பரே! :-)

//விக்கியுலகம் said...

மாப்ள கலக்கல் பதிவு...அதுவும் கடைசீல லேகியம் மேட்டரு டாப்புய்யா!//

வாங்க! மறக்காம லேகியம் சாப்பிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். :-)


//இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்!//

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//NIZAMUDEEN said...

கதை அருமை. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

//Chitra said...

Super!!!!!! :-) இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி சகோதரி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

//Philosophy Prabhakaran said...

சேட்டை... பேல்பூரி ஸ்டாலை மறுபடியும் திறந்ததற்கு வாழ்த்துக்கள்... வாராவாரம் தவறாமல் திறக்கவும்...//

மேட்டர் கிடைக்கணுமே? :-)) ஆனாலும் முயற்சி செய்கிறேன்.

//ஒற்றை வரி செய்தி விமர்சனங்கள் செம நக்கல்...//

மிக்க நன்றி நண்பரே! :-)

//நிரூபன் said...

வணக்கம் சகோ, நலமா?//

நலம்தான் சகோ! :-)

//உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய இன்பத் தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.//

மிக்க நன்றி சகோ! எனது மனமார்ந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் உற்றார் உறவினருக்கும். :-)

//குட்டிக் கதை...அசத்தலான தத்துவத்தைச் சொல்லி நிற்கிறது. எல்லோருமே பெரிய இலட்சியத்தை மனதில் வைத்திருந்தாலும், அந்த லட்சியத்தை அடைவோர் சிலரே...ஏனைய செய்திகளுக்கான சேட்டையின் ரகளைகள் அசத்தல்.ரசித்தேன்//

குட்டிக்கதை ராமகிருஷ்ணரின் உபதேசம் என்பதால் பெருமை அவரையே சேரும். சேட்டைகள் நம்ம சங்கதி என்பதால், அந்த ரகளைகளுக்கு நானே பொறுப்பு! மீண்டும் மீண்டும் நன்றி சகோ! :-)

//Harani said...

முதன் முறையாக வந்தேன். சேட்டைக்காரன் என்று இருந்தாலும் ரேஞ்சு எல்லாம் (பதிவுகள்) சித்தன் நிலைக்கு இருக்கின்றன. இராமகிருஷ்ண பரமஉறம்சர் கதை அருமை.//

அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்திராதீங்க, எப்பாவாச்சும் கொஞ்சம் சுமாரா எழுதுவேன். மத்தபடி நானெல்லாம் நக்கல் நமச்சிவாயம் தானுங்க! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//G.M Balasubramaniam said...

அன்பின் சேட்டை, இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.உங்கள் எடக்கு மடக்கு பதிவுகள் ரசிக்கும்படியிருந்தன.//

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் ஐயா! உங்கள் வருகை, வாழ்த்து, கருத்து அனைத்தும் எனக்குக் கிடைத்த ஆசிகளாய்க் கருதுகிறேன். மிக்க நன்றி ஐயா!

//யானைக்குட்டி@ ஞானேந்திரன் said...

அருமையான படைப்பு.
என் இனிய
அன்பின் நண்பனுக்கு .
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள் .
அன்பின் .
"யானைக்குட்டி "
ஞானேந்திரன்//

மிக்க நன்றி நண்பரே! இந்த வலையுலகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்த் தருகிற நட்புறவே பெரும் பரிசாய் எண்ணுகிறேன். இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//மனசாட்சி said...

பல்சுவை விருந்து தீபாவளி நல்வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி நண்பரே! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//veedu said...

தல தீபத்திருநாள் வாழ்த்துக்கள்//

தல ஒருத்தரு தான்; நம்ம சிபி.எஸ்! :-)
இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் நண்பரே!

//பட்டாசு விலையை பார்த்தாலே லேகியம் சாப்பிட்ட மாதிரிதான் இருக்கு//

பாக்கெட் புஸ்வாணம் ஆயிருச்சே! :-))

//நீங்க சேட்டையை ஆரம்பிங்க//

மிக்க நன்றி நண்பரே! :-)

//சத்ரியன் said...

சேட்டையண்ணெ! பேல் பூரியில தீபிகா பியாரி-ய (எனக்கு)அறிமுகப் படுத்தினதுக்கு நன்றிண்ணே.//

ஆஹா, அதுக்குள்ளே உங்களுக்குப் பியாரி ஆகிட்டாங்களா? அவ்வ்வ்வ்!

//உங்களுக்கும் ”லேகியா” தீபாவளி வாழ்த்துக்கள்-ணே!//

மிக்க நன்றிண்ணே! :-)

//சார்வாகன் said...


அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்//

மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

//சி.பி.செந்தில்குமார் said...

hi hi hi காணக்கண் கோடி வேண்டும் ஃபோட்டோ டாப்!!!//

அது சரி தல, இதுவரை உங்க கண்ணுலே எப்படி மாட்டாம இருந்திச்சு? :-)
மிக்க நன்றி!

//Sankar Gurusamy said...

நல்ல பஞ்ச்...தீபாவளி நல்வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

settaikkaran said...

//காந்தி பனங்கூர் said...

தீபிகா அழகா இருக்காங்க நண்பா.//

ஹிஹி! ஆமா, ரொம்ம்ப அழகு! :-)))

//தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//சேலம் தேவா said...

தீபாவளி நல்வாழ்த்துகள்..!!//

மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

ரொம்ப சரி//

மிக்க நன்றி!:-)

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...

Nice., அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல. நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான். உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...//

உண்மை! சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்று தலீவர் சொல்லியிருக்காரே? :-)

மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//புலவர் சா இராமாநுசம் said...

எதை எழுதினாலும் சேட்டைக்கு நிகர் சேட்டைதான்!
அனைத்தும் தீபாவளி இனிப்புகள்!//

ஐயாவின் வருகையும் வாழ்த்தும் தித்திப்பது போல இனிப்பு தித்திப்பதில்லை! :-)

//இனிய தீபாவளி வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி ஐயா! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//வெளங்காதவன் said...

புரிஞ்சுது! தீபாவளி வாத்துக்கள்!//

மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//ரிஷபன் said...

தீபாவளி நல்வாழ்த்துகள். கணேஷ் மின்னல் வரிகள் அறிமுகத்திற்கு நன்றி//

மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//Prabu Krishna said...

என்ன ஒரு நோக்கம். சரியான சேட்டையா நீர்.//

உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க விரும்பினேன் சாமி; பொதுநலம்! :-)
மிக்க நன்றி! :-)

//Avargal Unmaigal said...

இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!//

மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//ரெவெரி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...//

மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//middleclassmadhavi said...

தீபாவளி வாழ்த்துக்கள்!//
கலக்கல் பேல்பூரி!//

மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

லேகியம் இப்பவே சாப்பிட்டுட்டேன்..//

முன்ஜாக்கிரதை முத்தண்ணாவா நீங்க? :-)
மிக்க நன்றி ஐயா! :-)

//கே. பி. ஜனா... said...

தீபாவளி வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//RVS said...

பேல்பூரி பிடிக்காதவங்களுக்குக்கூட உங்களோடது பிடிச்சுப் போய்டுங்க தலைவரே! அசத்தல்....இன்னும் ஒரு ப்ளேட் என்னிக்கி கிடைக்கும். :-)//

பேல்பூரி மாசத்துக்கு ஒருவாட்டி அல்லது ரெண்டுவாட்டி சாப்பிட்டாப் போதுமே? :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//ஸ்ரீராம். said...

தீபாவளி நல்வாழ்த்துகள் சேட்டை....//

மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//அதீதத்தில் உங்கள கதைக்கு கமெண்ட் போட்டேன். என்ன ஆனது என்றே தெரியவில்லை!!//

பார்த்தேன்; வந்திருக்கிறது. வாசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி! :-)

//தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!நகைச்சுவையில் சேட்டைக்காரனாகவும், ஒரே இடத்தில் எல்லா செய்திகளையும் தரும் வேட்டைக்காரனாகவும் விளங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!//

ஆஹா! வேட்டைக்காரன் படத்தைப் பார்த்துத்தான் நானே சேட்டைக்காரனானேன். மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//சீனுவாசன்.கு said...

தீபாவளி வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//மாதேவி said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

//FOOD said...

பேல்பூரி பலே பலே.//

மிக்க நன்றி! இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)