Tuesday, September 6, 2011

வாஜி வாஜி வாஜி!

விநாயகர் சதுர்த்தி முடிந்து, களைத்துப்போய் ’அக்கடா’வென்று உட்கார்ந்திருந்த இஷ்டசித்தி விநாயகருக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு, பாண்டிபஜாரில் பஸ்ஸுக்குக் காத்திருப்பவனைப் போலப் புலம்ப ஆரம்பித்தேன்.

"பிள்ளையாரப்பா! இத்தனை வருசமா கும்புடுறேன். பேருமட்டும் பெரிசா இஷ்டசித்தி விநாயகர்னு வச்சிக்கிட்டு எனக்கு இப்படிக் கஷ்டசித்தியை மட்டுமே கொடுக்கிறியே! இவ்வளவு புலம்பியும் கண்டுக்காம இருந்தா இனிமேலு உன்னை மன்மோகன்சிங் விநாயகர்னுதான் கூப்பிடுவேன் சொல்லிட்டேன்!"

"சேட்டை!" என்று என் நெற்றியில் விபூதியைத் தீட்டினார் சிவாச்சாரியார். "இஷ்டசித்திப் பிராப்தி ரஸ்து!"

"சித்தியாவது பெரியம்மாவாவது! இத்தயேதான் அஞ்சு வருசமா நீங்களும் சொல்றீங்க!" என்று அபிராமிவாசல் வரைக்கும் போய் ஹவுஸ்புல் போர்டு பார்த்தவனாய்ச் சலித்துக்கொண்டேன்.

"இஷ்டசித்திங்குறது ரொம்ப பெரிய விஷயம்!" என்று விளக்கினார் சிவாச்சாரியார். "முதல்லே அஷ்டசித்திக்கு ட்ரை பண்ணு!"

"அஷ்டசித்தியா? அந்தப் புள்ளையார் எந்த ஏரியாவுலே இருக்காரு?"

"இவர்கிட்டேயே கேளு! அதுக்கு முன்னாலே அஷ்டசித்தின்னா என்னான்னு தெரியுமா?"

"இல்லை சாமி, எனக்கு அம்பத்தூர் சித்தியை மட்டும் தான் தெரியும்."

"அபிஷ்டூ! மொத்தம் எட்டு சித்தியிருக்குடா! முதலாவது சித்தியோட பேரு அனிமா!"

"அனிமாவா? ஆஸ்பத்திரியிலே டியூபைச் சொருகிக் கொடுப்பாங்களே அதுவா?"

"அது இனிமாடா! அனிமான்னா..உடம்பை எவ்வளவு வேணுமோ அவ்வளவு சின்னதாக்கிக்கலாம்!"

"இதுக்கு மேலே என் உடம்பைச் சின்னதாக்கினா, எங்க ஜி.எம். என்னை வச்சுக் காதுகுடைய ஆரம்பிச்சிருவாரு! அடுத்தது....?"

"அடுத்தது மஹிமா..!"

"யாரு நம்ம மஹிமா சௌத்ரியா? பர்தேஸ் படத்துலே ஷாருக் கான் கூட நடிச்சாங்களே?"

"கோவிலாச்சேன்னு பார்க்கிறேன். நீ உருப்படவே மாட்டியா? மஹிமா-ன்னா உடம்பை எவ்வளவு வேணுமோ அவ்வளவு பெரிசாக்கலாம்."

"அது வேணாம் சாமி! துணிமணி வாங்குறதும் கஷ்டம்;தோய்க்கிறதும் கஷ்டம்!"

"சரி, உனக்கு உடம்பு சம்பந்தமான சித்தி பிடிக்கலே போலிருக்கு! மூணாவது சித்தி கரிமா - உடம்போட எடையை அதிகமாக்குறது. நாலாவது லஹிமா - உடம்போட எடையை சல்லிசாக்கிக்கிறது."

"என் உடம்பு ஏற்கனவே பாப்புலர் அப்பளம் மாதிரி சல்லிசாத்தானிருக்கு! அடுத்தது...?"

"அடுத்தது பிராப்தி! நினைச்ச நேரத்துலே நினைச்ச இடத்துக்குப் போறது...!"

"ஹை! இது நல்லாயிருக்கே! டிக்கெட்டே வாங்க வேண்டாம்! சீசன் டிக்கெட்டுக்கு வரிசையிலே நிக்க வேண்டாம். இது எனக்குக் கிடைக்க நான் என்ன பண்ணனும் சாமி?"

"சுத்தமான மனசோட பகவானைப் பிரார்த்திக்கணும்."

"சுத்தமான மனசா? அது கிடைக்க ஏதாவது ஷார்ட்-கட் இருக்கா? ஒரு சாய்ஸ் கொடுங்க சாமி!"

"இதென்ன பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சையா? மனசிலே எந்தக் களங்கமும் இல்லாம கண்ணை முடி பகவானைப் பிரார்த்தனை பண்ணினா கண்டிப்பா பிராப்தி கிடைக்கும்!"

"தேங்க்ஸ் சாமி! ட்ரை பண்றேன்!"

"மீதி ரெண்டு...?"

"நாளைக்கு கேட்டுக்கறேன். இன்னிக்கு இவ்வளவு போதும்!"

வீடு திரும்பி, அடுத்த பதிவுக்கு ஐடியாவுக்காக, எல்லா தொலைக்காட்சிகளையும் கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு சேனலில் ’பணம் படைத்தவன்’ படத்திலிருந்து ’பவழக்கொடியிலே முத்துக்கள்..." பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஆஹா! தலைவர் ஷாஜஹான் மாதிரியும், கே.ஆர்.விஜயா மும்தாஜ் மாதிரியும் கெட்-அப்பில் தாஜ்மஹாலில் பாடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும், மனதுக்குள் இன்னும் தாஜ்மஹாலை முழுசாகப் பார்க்கவில்லை என்ற பழைய ஏக்கம், ஊறுகாய் பாட்டிலின் மூடியைத் திறந்ததும் குப்பென்று பீறிட்டுக் கிளம்பும் நெடிபோலக் கிளம்பியது.

ஒருசில வருடங்களுக்கு முன்னர் தில்லி சென்றிருந்தபோது, கன்னாட் பிளேசில் ஒரு பாடாவதி டிராவல்ஸின் பஸ்-சில் ஏறி ஆக்ரா-மதுராவெல்லாம் பார்க்கக் கிளம்பியிருந்தேன். அன்று பவுர்ணமியாக இருந்ததால், நிலவொளியில் தாஜ்மஹாலைக் காட்டப்போவதாகச் சொல்லிய படுபாவிகள், ஒருவழியாக தாஜ்மஹாலுக்குத் திரும்பியபோது, மழை கொட்டோ கொட்டேன்று கொட்டிக்கொண்டிருக்க, மின்தடை காரணமாக தாஜ்மஹாலே இருளில் மூழ்கியிருந்தது. வேறு என்ன செய்ய, தாஜ்மஹாலை முடிந்தவரை தடவிப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டி வந்தது.

ஆனால், ஒன்று! இந்தியாவிலேயே தாஜ்மஹாலில் சோப்புப் போட்டுக் குளித்தவன் நான் ஒருவனாகத் தானிருப்பேன்; தாஜ்மஹாலின் மேல்தளத்திலிருந்து குற்றால அருவிபோல அவ்வளவு தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.

வாழ்க்கையில் ஒருமுறையாவது தாஜ்மஹாலைப் பகல்வெளிச்சத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டபடியே உறங்கப்போனேன். சற்றே கண்ணயர்ந்ததுதான் தாமதம்....

"சேட்டைஜீ! சேட்டைஜீ!"

திடுக்கிட்டுக் கண்விழித்தேன். யாரது இந்தியிலே அழைப்பது? இதுவரை மார்வாடியிடம் கடன் எதுவும் வாங்கவில்லையே?

"சேட்டைஜீ! உட்டியே சேட்டைஜீ!"

"உட்டியேவா? என்னத்தையா உட்டேன்? யாருய்யா ராத்திரிலே வந்து கிருஷி-தர்ஷன் புரோகிராம் நடத்துறது?"

"சேட்டைஜீ! நம்மள் லக்னோ, உ.பி-லேருந்து வர்றான். நிம்மளை ஆக்ராவுக்குக் கொண்டு போறான்!"

"என்னது? ஆக்ராவுக்கா? தாஜ்மஹால் இருக்கே அந்த ஆக்ராவுக்கா?"

"ஹான் சேட்டைஜீ! உட்டியே ஜீ! ஆவோஜீ!"

"இருய்யா, எழுந்துக்கிறதுக்குள்ளே ஆவோஜீ, பார்லே-ஜீ, டூ-ஜீன்னு அடுக்கிட்டே போறியே? இந்த நேரத்துலே டிரெயின் கூட இல்லையே?"

"ஃபிகர் மத் கரோஜீ!"

"என்னது? ஃபிகரா? அடப்பாவி, யாருய்யா ஃபிகரைக் கூட்டிக்கிட்டு வரச்சொன்னாங்க?"

"நான் சொல்றான் - கவலைப்படாதீங்கஜீ! நம்மள் பிரைவேட் ஜெட் பிளேன் கொண்டுவந்திருக்கான் ஜீ! உட்டியேஜீ! ஆவோஜீ!"

ஆஹா! சிவாச்சாரியார் சொன்னது மாதிரியே எனக்கு பிராப்தி சித்தி கிடைத்து விட்டதா? சற்று முன்புதான் தாஜ்மஹால் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்; அதற்குள் பிரைவேட் ஜெட் பிளேன் வந்து விட்டதே! பிள்ளையாரப்பா, யூ ஆர் ரியலி கிரேட்!

மீனம்பாக்கத்துக்கு விரைந்து, அந்த ஆசாமியுடன் ஆடம்பரமான பிரைவேட் ஜெட் விமானத்தில் ஏறியமர்ந்ததும், விட்ட இடத்திலிருந்து உறக்கத்தைத் தொடர்ந்தேன். கனவில் ஷாஜஹான் போல நானும், மும்தாஜ் போல சரியாக முகம் தெரியாத ஒரு சுமாரான பெண்ணும் (அது போதாதா?) "பவழக்கொடியிலே முத்துக்கள் கோர்த்தால் புன்னகையென்றே பேராகும்..." பாடினோம். ஒரு வழியாக விமானம் ஆக்ராவைத் தொட்டதும் கண்விழித்தேன்.

"சேட்டைஜீ! ஆக்ரா வந்திட்டான்ஜீ! உட்டியேஜீ! உத்தர்ஜாயியேஜீ!"

கீழே இறங்கியதுதான் தாமதம்; வெள்ளைச்சீருடையும், தொப்பியும் அணிந்த சிலர் என்னைக் குண்டுக்கட்டாகத் தூக்கி, ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

"யோவ், யாருய்யா? வீட்டுலே சிவனேன்னு தூங்கிட்டிருந்தவனை பிளேனிலே கூட்டிக்கிட்டு வந்து எங்கேய்யா தள்ளிட்டுப்போறீங்க?"

"டேய் சேட்டை!" என்றான் என்னை அழைத்துவந்த ஆசாமி. "எங்க பெஹன்ஜீ மாயாவதியைப் பத்தி ஒருவருசத்துக்கு முன்னாலே காக்கா..காக்கா-ன்னு எழுதினே இல்லே? அதுக்குத்தாண்டா உன்னை அவங்களோட பிரைவேட் ஜெட்டுலே தூக்கிட்டு வந்திருக்கோம்."

"என்னது? ஒரு இடுகை எழுதினதுக்கா என்னை ஜெட் பிளேன்-லே தூக்கிட்டு வந்திருக்கீங்க? யோவ், நான் அவ்வளவு ’வொர்த்’ எல்லாம் கிடையாதுய்யா! என்னை விடுங்க!"

"வாயை மூடு! உனக்கு வொர்த் இல்லேன்னு தெரியாதா எங்களுக்கு? எங்க பெஹன்ஜீ அவங்களுக்குப் பிடிச்ச செருப்பைக் கொண்டுவர்றதுக்கே லக்னோவிலேருந்து மும்பைக்கு பிரைவேட் பிளேனை அனுப்புறவங்க! உன்னைக் கொண்டு வர்றதா பெரிய விஷயம்?"

"ஐயையோ, அப்படீன்னா என்னை மாயாவதி மேடம் கிட்டேயா கொண்டு போறீங்க?"

"இவரு பெரிய வி.ஐ.பி, மேடம் கிட்டே கொண்டு போறதுக்கு! ஆக்ரா-ன்னா தாஜ்மஹால் மட்டும்தான் பிரபலம்னு நினைச்சியா சேட்டை? இன்னொரு பிரபலமான சமாச்சாரமும் ஆக்ராவுலே இருக்கு; பைத்தியக்கார ஆஸ்பத்திரி! அங்கேதான் உன்னை அட்மிட் பண்ணக் கூட்டிக்கிட்டுப் போறோம். புரியுதா?"

"ஐயையோ!" அலறியபடி நான் உறக்கத்திலிருந்து கண்விழித்தேன். "என்னைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணாதீங்க! அட் லீஸ்ட், அங்கே இருக்கிற பைத்தியங்க மேலே கருணை காட்டியாவது என்னை விட்டிருங்க! ப்ளீஸ்!! என்னை விடுங்க! முஜே சோடோ! சோடோ!"

அலறிமுடித்தபிறகுதான் புரிந்தது - அட, எல்லாம் கனவு!

நான் சென்னையில்தான் இருக்கிறேன்! ஆஹா, விக்கிலீக்ஸ் மாயாவதி பற்றி வெளியிட்ட தகவல்களைக் கண்டித்து, மாயாவதி விக்கிலீக்ஸ் அஸாஞ்சைஆக்ரா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அனுமதிக்கத்தயார்’ என்று சொன்னதையும், ’மாயாவதியின் பிரைவேட் ஜெட் பிளேனை அனுப்பினால் இந்தியாவுக்கு வரத்தயார்,’ என்று அசாஞ்ச் சொன்னதையும் பற்றி யோசித்தபடியே உறங்கியதால், இப்படியோரு பயங்கரமான கனவு வந்திருக்குமோ?

ஐயா சாமி, இனிமேல் பெஹன்ஜீ மாயாவதியைப் பற்றி ஒரு இடுகை கூட எழுதக்கூடாது! இனிமேல் ஆக்ராவும் வேண்டாம்; தாஜ்மஹாலும் வேண்டாம்.

இனிமேல், தாஜ்மஹால் டீ கூட குடிக்க மாட்டேன் சாமி! ஆளை விடுங்க!

21 comments:

Anonymous said...

உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள் -:)

Philosophy Prabhakaran said...

சேட்டை... பேப்பர்ல மாயாவதி பத்தின செய்தி படிச்சதுமே உங்க பழைய இடுகை தான் நினைவுக்கு வந்தது... அதற்குள் இதையும் பதிவாக்கிட்டீங்க... கலக்கலா இருக்கு...

Philosophy Prabhakaran said...

ஒரு சந்தேகம்... அது பவழக்கொடியா அல்லது பவளக்கொடியா...?

சேலம் தேவா said...

சூப்பர் சேட்டைஜி..!! :)

கும்மாச்சி said...

\\இனிமேல், தாஜ்மஹால் டீ கூட குடிக்க மாட்டேன் சாமி! ஆளை விடுங்க!//

சேட்டை, பகல் கனவா? ஹூம் நடக்கட்டும்

rajamelaiyur said...

//
’மாயாவதியின் பிரைவேட் ஜெட் பிளேனை அனுப்பினால் இந்தியாவுக்கு வரத்தயார்,’
//
நெத்தியடி பதில்

SURYAJEEVA said...

அரசியல் வாதிகளை தாக்கி எழுதுகிற எங்களுக்கு எல்லாம் ஆட்டோ வர மாதிரி தான் கனவு வருது, உங்களுக்கு ஜெட்டேல்லாம்.. பெரிய ஆளுங்க நீங்க..

Unknown said...

மாப்ள உட்டியே...உட்டியே ன்னு சொல்லியே உன்னைய உதைக்க பாத்தாங்களா கனவுல...அதுவும் அந்த பேயாவதி ச்சே மாயாவது கும்பலா...யப்பா ஒவ்வருத்தனும் கட்ட கட்டயா இருப்பானே....ஷங்கிரிகா டோலு பசங்க!

நாய் நக்ஸ் said...

SETTAIKU PLAN ETHARKU?
Auto pothathu?

ரிஷபன் said...

மஹிமா-ன்னா உடம்பை எவ்வளவு வேணுமோ அவ்வளவு பெரிசாக்கலாம்."

"அது வேணாம் சாமி! துணிமணி வாங்குறதும் கஷ்டம்;தோய்க்கிறதும் கஷ்டம்!"

சித்தர்களுக்கு தெரிஞ்சா உங்களை என்ன பண்ணுவாங்களோ..

நிரூபன் said...

"பிள்ளையாரப்பா! இத்தனை வருசமா கும்புடுறேன். பேருமட்டும் பெரிசா இஷ்டசித்தி விநாயகர்னு வச்சிக்கிட்டு எனக்கு இப்படிக் கஷ்டசித்தியை மட்டுமே கொடுக்கிறியே! இவ்வளவு புலம்பியும் கண்டுக்காம இருந்தா இனிமேலு உன்னை மன்மோகன்சிங் விநாயகர்னுதான் கூப்பிடுவேன் சொல்லிட்டேன்!"//

ஹா...அஹா...ஆரம்பமே அரசியல் சாடலுடன் தொடங்கியிருக்கிறது.

நிரூபன் said...

"சித்தியாவது பெரியம்மாவாவது! இத்தயேதான் அஞ்சு வருசமா நீங்களும் சொல்றீங்க!" என்று அபிராமிவாசல் வரைக்கும் போய் ஹவுஸ்புல் போர்டு பார்த்தவனாய்ச் சலித்துக்கொண்டேன்.//

நகைச்சுவைகளில் கூட உவமையணியைக் கையாளும் திறமை உங்களிடம் மாத்திரம் தான் காண்கிறேன்.

கலக்கல் பாஸ்..

நிரூபன் said...

"என்னது? ஒரு இடுகை எழுதினதுக்கா என்னை ஜெட் பிளேன்-லே தூக்கிட்டு வந்திருக்கீங்க? யோவ், நான் அவ்வளவு ’வொர்த்’ எல்லாம் கிடையாதுய்யா! என்னை விடுங்க!"//

ஹா..ஹா...
புரிய வேண்டியவர்களுக்கு இது புரிந்தால் சரி..
அவ்...............

நிரூபன் said...

நாசூக்காக அரசியல்வாதிகளின் தவறுகளைச் சாடியும், எதற்கும் அஞ்சாதவர்களான உள்ளூர் அரசியல்வாதிகள் அசாஞ்யைக் கூடப் புறக்கணித்து அறிக்கை விட்டிருக்கிறார்களே எனும் சேதியையும் உங்களின் இடுகை தாங்கி வந்துள்ளது.

நகைச்சுவை கலந்து பிள்ளையாரைக் கலாய்த்து,இறுதி வரிகளில் அரசியல்வாதிகளையும் நையாண்டி செய்திருக்கிறது இந்த இடுகை.

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்நாடு தாண்டிய நக்கல்

settaikkaran said...

//ரெவெரி said...

உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள் -:)//

ஆஹா! இப்படியொரு ஆசீர்வாதமா? மிக்க நன்றி! :-)

//Philosophy Prabhakaran said...

பேப்பர்ல மாயாவதி பத்தின செய்தி படிச்சதுமே உங்க பழைய இடுகை தான் நினைவுக்கு வந்தது..//

நியாயம்தான். அந்த மாயாவதியைப் பத்தி நினைச்சா, இந்த பாடாவதியைப் பத்தியும் ஞாபகம் வரத்தானே செய்யும்? :-)

//அதற்குள் இதையும் பதிவாக்கிட்டீங்க... கலக்கலா இருக்கு...//

வேறே யாராவது சுடுறதுக்கு முன்னாடி முந்திக்கணுமே?

// ஒரு சந்தேகம்... அது பவழக்கொடியா அல்லது பவளக்கொடியா...?//

பவழக்கொடியிலே-ன்னுதான் நினைக்கேன்.

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//சேலம் தேவா said...

சூப்பர் சேட்டைஜி..!! :)//

தன்யவாத் ஜீ! :-)

//கும்மாச்சி said...

சேட்டை, பகல் கனவா? ஹூம் நடக்கட்டும்//

நோ நோ! ராத்திரிக்கனவுதாங்க! மிக்க நன்றி! :-)

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

நெத்தியடி பதில்//

அனுப்ப மாட்டாங்கன்னுற தைரியம்தான்! :-)
மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//suryajeeva said...

அரசியல் வாதிகளை தாக்கி எழுதுகிற எங்களுக்கு எல்லாம் ஆட்டோ வர மாதிரி தான் கனவு வருது, உங்களுக்கு ஜெட்டேல்லாம்.. பெரிய ஆளுங்க நீங்க..//

காணுறதோ கனவு, அதுலேயாவாது கொஞ்சம் பெரிசா நினைச்சுக்கலாமேன்னு ஒரு நப்பாசைதான்! :-)
மிக்க நன்றி! :-)

//விக்கியுலகம் said...

மாப்ள உட்டியே...உட்டியே ன்னு சொல்லியே உன்னைய உதைக்க பாத்தாங்களா கனவுல...அதுவும் அந்த பேயாவதி ச்சே மாயாவது கும்பலா...யப்பா ஒவ்வருத்தனும் கட்ட கட்டயா இருப்பானே....ஷங்கிரிகா டோலு பசங்க!//

நீங்க சொல்றதைப் பார்த்தா, அந்தக் கும்பலை ஏற்கனவே பார்த்திருப்பீங்க போலிருக்குதே!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//NAAI-NAKKS said...

SETTAIKU PLAN ETHARKU? Auto pothathu?//

எனக்கு பஸ் கூட போதும்தான். கனவுதானே?
மிக்க நன்றி! :-)

//ரிஷபன் said...

சித்தர்களுக்கு தெரிஞ்சா உங்களை என்ன பண்ணுவாங்களோ..//

இருந்தாத்தானே தெரியப்போவுது? :-)
மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//நிரூபன் said...

ஹா...அஹா...ஆரம்பமே அரசியல் சாடலுடன் தொடங்கியிருக்கிறது.//

ஃபினிஷிங் எப்படியிருந்தாலும் சரி, ஸ்டார்ட்டிங் நல்லாயிருக்கணும்.

//நகைச்சுவைகளில் கூட உவமையணியைக் கையாளும் திறமை உங்களிடம் மாத்திரம் தான் காண்கிறேன்.கலக்கல் பாஸ்..//

சென்னையில் பத்து வருடங்கள் குப்பை கொட்டினால், நகைச்சுவை உணர்வு, உவமானமெல்லாம் தானாய் வரும். :-)

//ஹா..ஹா...புரிய வேண்டியவர்களுக்கு இது புரிந்தால் சரி..அவ்...............//

மத்தவங்களைப் பத்தித் தெரியாது சகோ! எனக்கு நல்லாவே புரியும்! :-)))))


// நாசூக்காக அரசியல்வாதிகளின் தவறுகளைச் சாடியும், எதற்கும் அஞ்சாதவர்களான உள்ளூர் அரசியல்வாதிகள் அசாஞ்யைக் கூடப் புறக்கணித்து அறிக்கை விட்டிருக்கிறார்களே எனும் சேதியையும் உங்களின் இடுகை தாங்கி வந்துள்ளது.//

வெளியான செய்திகளுக்காக அமெரிக்காவின் மீது கோபப்படாமல், அசாஞ்ஜ் மேல் கோபப்படுகிற வேடிக்கையை என்னவென்று சொல்ல..? :-)

//நகைச்சுவை கலந்து பிள்ளையாரைக் கலாய்த்து,இறுதி வரிகளில் அரசியல்வாதிகளையும் நையாண்டி செய்திருக்கிறது இந்த இடுகை.//

பிள்ளையார் நம்ம அண்ணாத்த...எம்புட்டுக் கலாய்ச்சாலும் ஒன்னியும் கண்டுக்க மாட்டாரு! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ! :-)

//சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்நாடு தாண்டிய நக்கல்//

வாங்க தல, கொஞ்சம் ஏரியாவைத் தாண்டியும் போகணுமில்லா? :-)
மிக்க நன்றி!

நடராஜன் said...

அப்படியே மிச்ச சித்திகளும் யாரென்று சொல்லிவிட்டால் கொஞ்சம் கற்று கொண்டது போலவும் இருக்கும் அல்லவா?