Tuesday, July 27, 2010

இன்னும் ஒரு கவிதை!


குதித்துச்செல்லும் நதி
குளிரடிக்கும் காற்று!
குவிந்து படர்ந்த மேகம்
குதூகலமான வாழ்க்கை!

இரவுபெய்த மழையில்
ஈரமான மரங்கள்!
இலைகள் சொட்டிய நீருடன்
மரம் வடித்த கண்ணீர்....!

நதியின் ஓட்டமும்
காற்றின் கதகதப்பும்
மேகத்தின் குவியலும்
வாழ்க்கையின் சிரிப்பும்
என்றோ ஒருநாள்
எங்கோ நிற்கும்!

இதோ...

ஒவ்வொருவரும் என்னைப்போல்
ஒளிந்திருக்கிறார்கள்!

பெரிய இருட்டுக்கு அஞ்சி
சின்ன இருட்டுக்குள்ளே
சிறையிருக்கிறோம்!

வசந்தத்துக்காகத் திறந்து வைத்தது
இதோ..!

அந்தம் வந்து கதவருகே
அழைப்புமணியடிக்கிறது!

காலிக்கோப்பைகள் கேலியாய்க்
கண்சிமிட்டுகின்றன

இன்றைக்குக் காலையில்
இன்னும் கொஞ்சம் ரசித்திருக்கலாமோ?

பறவைகளின் பள்ளியெழுச்சி...
படர்ந்த காலைப்பனி...
தூளியிலிருந்து விழுந்த பூக்கள்
தூரத்தில் கேட்ட கோவில்மணி...!

இன்னும் கொஞ்சம் ரசித்திருக்கலாமோ?

ஆசையில் வாங்கிய உடமைகள்
அன்னியமானது போல...

இன்று மட்டும் தான்
கண்ணாடியே என்னைக்
காண்பதுபோலிருக்கிறது!

எனது புகைப்படத்தை
ஏன் இத்தனை நேரம்
வாஞ்சையோடு வருடுகிறேன்?

கண்களைத் திருப்பிக்கொள்கிறேன்
கடியாரம் தெரியவில்லை!
ஆனாலும்...
முட்கள் ஒடுகிற சத்தம் மட்டும்
முன்னை விட உரக்க....உரக்க...!

16 comments:

☀நான் ஆதவன்☀ said...

கவிதை நல்லாயிருக்கு. ஆழ்ந்து படிக்கும் போது கவிதை பெரும்சோகமாக தெரிகிறது :(

'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதை.

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் said...

ஆஹா ! கவிதை அருமை.
சகலகலா வல்லவராக இருக்கிரிர்களே நண்பரே வாழ்த்துக்கள்

vasu balaji said...

ம்ம். என்னாதிது:(.

Unknown said...

சேட்டை உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன். முடிஞ்சா தொடருங்க.

Chitra said...

பெரிய இருட்டுக்கு அஞ்சி
சின்ன இருட்டுக்குள்ளே
சிறையிருக்கிறோம்!


......எளிமையாக சொல்லி இருக்கீங்க.... உள்ளுக்குள் இருக்கும் ஆழமான அர்த்தம் ........ம்ம்ம்ம்ம்ம்ம்..... அருமைங்க!

Chitra said...

கண்களைத் திருப்பிக்கொள்கிறேன்
கடியாரம் தெரியவில்லை!
ஆனாலும்...
முட்கள் ஒடுகிற சத்தம் மட்டும்
முன்னை விட உரக்க....உரக்க...!


..... மனதுக்குள் ஒரு திக்... திக்.... தான்!

வெங்கட் நாகராஜ் said...

கவிதையிலும் கலக்குறீங்க நண்பரே.

பகிர்வுக்கு நன்றி.

VELU.G said...

அருமைங்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பரே அருமை...

சிநேகிதன் அக்பர் said...

கவிதை அருமை சேட்டை.

தனி காட்டு ராஜா said...

கால ஓட்டத்தில் ஓட ஓட ரசனை பின் தங்கி விடுகிறது ...
நல்ல கவிதை

ஹேமா said...

இறந்த பின்னர் இப்பிடி நினைக்க வைக்குமோ...நான் இப்படித்தான் புரிந்துகொண்டேன் !

அஷீதா said...

நதியின் ஓட்டமும்
காற்றின் கதகதப்பும்
மேகத்தின் குவியலும்
வாழ்க்கையின் சிரிப்பும்
என்றோ ஒருநாள்
எங்கோ நிற்கும்!

இதோ...

ஒவ்வொருவரும் என்னைப்போல்
ஒளிந்திருக்கிறார்கள்!//

சொல்வதற்க்கு வார்த்தைகள் இல்லை...

INDIA 2121 said...

நல்ல ரசனை
அருமை